சென்னை:
கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது.
சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக் கிழங்கு. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கிழங்கு சேப்பழங்கிழங்கு போல் இருக்கும். அதன் நுனியில் வேர் இருக்கும்.
இதன் மருத்துவ பயன்களை எடுத்துக் கொண்டால் கோரை கிழங்கு எல்லாவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாயை தூண்டும்.
இதன் மருத்துவ பயன்களை எடுத்துக் கொண்டால் கோரை கிழங்கு எல்லாவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாயை தூண்டும்.
உடலுக்கு பலத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கு செரிமான சக்தியை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சரி செய்யும். உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும். மூட்டு வலி, தசை வலி நீங்கும். கோரைக்கிழங்கை காய்ச்சாத பாலுடன் சேர்த்து பூசி குளித்தால் வியர்வை நாற்றம் அகலும். குடலில் இருக்கும் புழுக்களை போக்கும். சொரி, சிரங்கை நீக்கும்.
அடிக்கடி சளி பிடித்தாலும் கோரைக் கிழங்கு அதை குணமாக்கும். கோரை கிழங்கு பொடியை பாலுடன் சேர்த்து குடித்தால் ஆஸ்துமா விலகும். மஞ்சள் காமாலையை போக்கும் அருமருந்து. இது புல் வகையை சேர்ந்தது. கசப்பு தன்மையுடன் இருக்கும். சரும நோய்களை போக்கும் தன்மை உள்ளது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாத்து என்றும் இளமையுடன் இருக்க வைக்கும்.