பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்ட் விவகாரம் குறித்தும், பணம் கொடுத்து டைட்டில் வென்றதாக விமர்சனங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
அதிக பார்வையாளர்களை கொண்ட பிக்பாஸின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் முடிவடைந்தது.இந்த சீசனில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆனார் அர்ச்சனா. தொடர்ந்து மணி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட அர்ச்சனா எங்கே சென்றுவிட்டார் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், முதன்முறையாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.அதில், சோசியல் மீடியாவில் பிஆர் டீம் மூலம் டைட்டில் வின்னராகிவிட்டதாக பேசப்படும் கருத்துக்கு, தான் பிஆர் வைத்து டைட்டில் வின்னராக முடியுமானால் நான் எப்போதோ பெரிய இடத்திற்கு போயிருப்பேன் என சிரித்த படி கூறினார்.மேலும், பல லட்சம் செலவு செய்து தான் இந்த டைட்டில் பட்டத்தை வாங்கி இருக்கிறார் என்று எழுந்த விமர்சனத்திற்கு இவ்ளோ செலவு செய்து பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வாங்குவதற்கு பதிலாக 1 கோடி வைத்து ஒரு படத்தை இயக்கி ஹீரோயினாக நடித்து விடுவேனே. நான் public response வைத்து தான் ஜெயித்தேன் என்று கூறியுள்ளார்.பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது, திட்டமிடப்பட்ட சதி, பிரதீப் நல்ல ப்ளேயர் என்பதால் அனைவரும் ப்ளான் செய்து ரெட் கார்ட் கொடுத்ததாகவும் பேசினார்.