அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

205 0

சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல் தலைவர்கள் சீண்டியதன் பேரில் அவரது பார்வை படிப்படியாக அரசியலுக்கு திரும்பியது.

அரசியலில் தனது வருகை சாதாரணமாக இருக்கக் கூடாது என்று செம்மையாக பல திட்டங்களை வகுத்து இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார் விஜய். கடந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு நடிகர்களாக வரிசையில் நின்று வாக்களிக்க, இவரோ யாரும் எதிர்பாராத அளவு சைக்கிளில் வந்து  வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவது, தொகுதி வாரியாக நூலகம் அமைப்பது, மழை திட்ட உதவி, வெள்ள நிவாரண பணி என அரசியலுக்கான அச்சாரத்தை பலமாக போட்டார் விஜய்.  இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவாரோ என்று எண்ணிக்  கொண்டிருந்தனர் ரசிகர்கள்.கடந்த ஆண்டு இதை உறுதி செய்யாத வகையில் வாரிசு,லியோ என வெற்றி படங்களை கொடுத்து விட்டு அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் G.O.A.T படத்திலும் இணைந்தார் தளபதி.  என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் சினிமாவா? அரசியலா? என்று ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறார் விஜய்.G.O.A.T படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விஜய் 69 காண இயக்குனர் தேர்வு, தயாரிப்பு நிறுவனம் என ஒவ்வொன்றையும் கவனமாக தேர்வு செய்து வருபவர், தனது அரசியலையும் விட்டுவிடாமல் கமுக்கமாக  சென்னையை அடுத்த பனையூரில் நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையிலும் ஈடுபட்டு உள்ளார்.

தென் மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு தனது அரசியல் கட்சியை பதிவு  செய்யலாமா அல்லது  கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாமா போன்ற பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளார் தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறப்போவது உறுதியாகியுள்ளது. தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் “நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள்” என்று மக்களிடம் கூறுமாறு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.  “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான்! தளபதி தளபதி நீயே எங்கள் தளபதி!” என ரசிகர்கள் குதூகலிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Related Post

கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!

Posted by - November 13, 2025 0
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் : சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Posted by - June 26, 2024 0
  2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 3…

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

Posted by - February 10, 2026 0
காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

குடந்தை:அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கு..அவதிபடும் பொது மக்கள்…

Posted by - December 8, 2023 0
கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கபடும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடபடுகிறது.அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் மக்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *