சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல் தலைவர்கள் சீண்டியதன் பேரில் அவரது பார்வை படிப்படியாக அரசியலுக்கு திரும்பியது.
தென் மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு தனது அரசியல் கட்சியை பதிவு செய்யலாமா அல்லது கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாமா போன்ற பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளார் தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறப்போவது உறுதியாகியுள்ளது. தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் “நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள்” என்று மக்களிடம் கூறுமாறு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளாராம். “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான்! தளபதி தளபதி நீயே எங்கள் தளபதி!” என ரசிகர்கள் குதூகலிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.