அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

210 0

சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல் தலைவர்கள் சீண்டியதன் பேரில் அவரது பார்வை படிப்படியாக அரசியலுக்கு திரும்பியது.

அரசியலில் தனது வருகை சாதாரணமாக இருக்கக் கூடாது என்று செம்மையாக பல திட்டங்களை வகுத்து இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார் விஜய். கடந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு நடிகர்களாக வரிசையில் நின்று வாக்களிக்க, இவரோ யாரும் எதிர்பாராத அளவு சைக்கிளில் வந்து  வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவது, தொகுதி வாரியாக நூலகம் அமைப்பது, மழை திட்ட உதவி, வெள்ள நிவாரண பணி என அரசியலுக்கான அச்சாரத்தை பலமாக போட்டார் விஜய்.  இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவாரோ என்று எண்ணிக்  கொண்டிருந்தனர் ரசிகர்கள்.கடந்த ஆண்டு இதை உறுதி செய்யாத வகையில் வாரிசு,லியோ என வெற்றி படங்களை கொடுத்து விட்டு அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் G.O.A.T படத்திலும் இணைந்தார் தளபதி.  என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் சினிமாவா? அரசியலா? என்று ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறார் விஜய்.G.O.A.T படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விஜய் 69 காண இயக்குனர் தேர்வு, தயாரிப்பு நிறுவனம் என ஒவ்வொன்றையும் கவனமாக தேர்வு செய்து வருபவர், தனது அரசியலையும் விட்டுவிடாமல் கமுக்கமாக  சென்னையை அடுத்த பனையூரில் நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையிலும் ஈடுபட்டு உள்ளார்.

தென் மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு தனது அரசியல் கட்சியை பதிவு  செய்யலாமா அல்லது  கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாமா போன்ற பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளார் தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறப்போவது உறுதியாகியுள்ளது. தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் “நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள்” என்று மக்களிடம் கூறுமாறு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.  “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான்! தளபதி தளபதி நீயே எங்கள் தளபதி!” என ரசிகர்கள் குதூகலிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Related Post

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது… 91.55% பேர் தேர்ச்சி- இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

Posted by - May 10, 2024 0
தமிழ்நாட்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம்…

“TVK தலைவருக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு” மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

Posted by - February 14, 2025 0
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு…

EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்… மின்சார வாரியம் அறிவிப்பு..

Posted by - November 26, 2022 0
ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை. ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம்…

சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி இர்பான்.. நடவடிக்கைக்கு பயந்து எடுத்த முடிவு

Posted by - May 22, 2024 0
ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என ரிவியூ சொல்லி யூட்டியூபில் பாப்புலர் ஆனவர் இர்பான். அவர் சமீபத்தில் தொடங்கிய குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராகவும் வந்திருக்கிறார்.…

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - May 17, 2023 0
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *