கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்… 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காங்கிரசில் ஆச்சரியம்!

180 0

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019 பிப்ரவரில் அப்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்தது. அவரது தலைமையில் திமுகவுடன் இருந்துகொண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில், அவர் விரைவில் தலைமை பொறுப்பில் இருந்து மாற்றப்படுவார் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே அடிபட்டு வந்தது. மேலும், தலைவர் பதவிக்கு கரூர் எம்பி ஜோதிமணி, எம்பி கார்த்தி சிதம்பரம், எம்பி மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டு வந்தன.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கு.செல்வப்பெருந்தகை கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தற்போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவாகவும், கட்சியில் சட்டசபை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரைத் தொடர்ந்து 40 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த கட்சியின் சட்டசபை தலைவர் பதவிக்கு ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Related Post

தவெக மாநாடு தேதி… உறுதியாக இருக்கும் விஜய் – செயல் திட்டம் இதுதான்!

Posted by - September 13, 2024 0
அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என விஜய் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்…

நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை

Posted by - February 20, 2025 0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில…

பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை: அதிமுக தீர்மானம் முழு விவரம்..

Posted by - September 25, 2023 0
இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின்…

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Posted by - October 6, 2025 0
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப்…

“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

Posted by - March 27, 2026 0
சென்னை: “நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *