தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019 பிப்ரவரில் அப்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்தது. அவரது தலைமையில் திமுகவுடன் இருந்துகொண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு இடங்களை கைப்பற்றியது.