தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்?

312 0

2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள  டாப் 10 அறிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம்

8 லட்சம் கான்கிரீட் வீடுகள் குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இத்திட்டத்திற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு. ஒரு வீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சமாக நிர்ணயம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மேலும் 2 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைவார்கள்.

3 ஆம் பாலினத்தவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்..!

உயர்கல்வி பயில விரும்பும் 3 ஆம் பாலினத்தவர்களுக்கான முழு செலவையும் அரசு ஏற்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை

அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ₹1000 உதவித்தொகை! அரசு பள்ளிகளில் 6-12 வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற தமிழ்ப் புதல்வன் திட்டம். இத்திட்டத்தில் மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகம்

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு. நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு. தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் விரிவாக்கம்..!

பெண்களின் உயர்கல்விக்கு உதவும் புதுமை பெண் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் உருவாக்கப்படும்..!

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பு படிக்க புதிய திட்டம்..!

அரசு பள்ளி மாணவர்கள் பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வெளிநாட்டு சென்று மேற்கொள்ள உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மெட்ரோ…

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4,625 கோடியில் பெறப்பட்டு மத்திய அரசின் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்படும்.

தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க்…

தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

Related Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்

Posted by - January 6, 2026 0
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும். இதனை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் முடித்து…

எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜீவானந்தம் வைத்த ட்விஸ்ட்.. நான்கு மருமகளிடம் சிக்கி சின்னாபின்னமாக போகும் குணசேகரன்

Posted by - December 20, 2024 0
முடிந்து போன ஒரு சீரியலுக்கு இந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது முழுக்க முழுக்க எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டுமே. யாருமே எதிர்பார்க்காத வகையில் அவசர…

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

Posted by - October 14, 2024 0
கனமழை எச்சரிக்கையை அடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

Posted by - March 15, 2023 0
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார். 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு…

தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - April 17, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *