2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு.. தவெக அறிவிப்பு

193 0

சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கூட்டத்திற்கு பிறகு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட உடனேயே கட்சியை கட்டமைக்கும் பணிகளை விறுவிறுவென மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து கூட்டம் முடிந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அதனுடன் இணைந்து நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதை பயன்படுத்தியே உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பாக செய்து 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

Posted by - April 10, 2025 0
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு…

இன்று தமிழகம் வரும் மோடி.!

Posted by - January 23, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே…

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *