கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே கல்யாணி மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. அந்த சிறுவனை அவன் குடியிருந்த பகுதிக்கு சென்று காவல்துறை கைது செய்தது. அவனிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை செய்தியாளர்களிடம்,“கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.
பாலியல் வன்கொடுமை
இதில் சிறுவன், சிறுமியின் தந்தையால் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்க வேண்டுமென முடிவு செய்த சிறுவன், அவரின் 9 வயது மகளான சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பிளேடால் அந்த சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான்” எனத் தெரிவித்திருக்கிறது.
புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா. முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த…
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…
குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி ராம்சந்திரா. கல்லூரி மாணவியான இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பெருங்கேட் பகுதியில் சென்று…