ஜெயலலிதா என்கிற ஆளுமையின் அழியாத நினைவுகள்…

146 0

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்தார் ஜெயலலிதா.

நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது நினைவலைகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

திரைத்துறையில் 1961இல் கன்னடத்தில் அறிமுகம் பெற்று பின்னர் 1965இல் ‘வெண்ணிறாடை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர் ஜெயலலிதா. ஒட்டுமொத்தமாக 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார். எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளராகவும் தீவிர பற்றாளராகவும் ஜெயலலிதா வலம் வந்தார்.

1980 இல் திரைத் துறையில் இருந்து விலகிய ஜெயலலிதா, பின்னர் 1982 ஆம் ஆண்டு, கடலூரில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 1983 ஆம் ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

1987 இல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா – அதிமுக ஜானகி அணி என்று இரு அணிகளாகப் பிரிந்தது. 1989 இல், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முதல் முறையாகச் சென்றார். அவரது இந்த வெற்றி அதிமுகவை ஒன்றாக இணைத்தது.

பின்னர் 1991 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். பின்னர் மீண்டும் 2001 இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் டான்சி வழக்கில் அவர் பதவி விலகினார்.

அப்போது முதலமைச்சராக முதல்முறையாக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர். 3 ஆவது முறையாக ஜெயலலிதா 2002 முதல் 2006 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

மீண்டும் 2011 இல் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழக்க நேரிட்டது. இதனால், மீண்டும் முதலமைச்சராக ஓபிஎஸ் பதவி ஏற்றிக் கொண்டார். பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். 2016 இல் எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவைத் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்து 6 ஆவது முறையாக முதலமைச்சரானார் ஜெயலலிதா. அந்த ஆண்டு அவர் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.அவரது ஆட்சிக் காலங்களில் தொட்டில் குழந்தை திட்டம், பெண்கள் காவல் நிலையங்கள், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், மகளிருக்கான இருசக்கர வாகன திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்த ஜெயலலிதா, 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சியை இழந்தார்.தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட பெரும் தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்த சந்தேகம்.. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்.. அதிமுகவில் பிளவு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது, தேர்தல் தோல்விகள் இவை எல்லாம் இன்று வரை நீண்டு கொண்டே இருக்கிறது.

Related Post

இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

Posted by - January 23, 2025 0
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன. செல்போன்…

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

Posted by - July 25, 2023 0
டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு…

கர்ப்பிணி மனைவியை சரமாரி துப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபர்- வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது

Posted by - November 16, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில்…

ஓணம் லாட்டரியால் அடித்தது அதிர்ஷ்டம்: திருப்பூரை சேர்ந்த 4 பேர் ரூ.25 கோடிக்கு அதிபதியானார்கள்

Posted by - September 22, 2023 0
திருவனந்தபுரம்: கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில்…

படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை

Posted by - August 21, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *