தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்டோர் தெருவே செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருத்தல் வழங்கப்பட்டு வருகிறது .
அந்தவகையில் தமிழக அரசு அறிவித்துள்ள திரைப்பட விருதுகள் தற்போது பார்க்கலாம் :
- சிறந்த படத்துக்கான முதல் பரிசு ஜெயம் ரவி நடிப்பில் உருவான தனி ஒருவன் படத்திற்கு வழங்கப்டுடுகிறது.
- சிறந்த படத்துக்கான இரண்டாம் பரிசு பசங்க -2 படத்திற்கு வழங்கப்டுடுகிறது.
- சிறந்த படத்துக்கான மூன்றாம் பரிசு பிரபா என்ற படத்திற்கு வழங்கப்டுடுகிறது.
- சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு மாதவன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்திற்கு வழங்கப்டுடுகிறது.
- பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படத்துக்கான சிறப்பு பரிசு ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படத்துக்கு வழங்கப்டுடுகிறது .
- சிறந்த நடிகராக இறுதிச்சுற்றுப்படத்தில் நடித்த மாதவனும், சிறந்த நடிகையாக ஜோதிகாவும் (36 வயதினிலே) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 27 பேருக்கு தமிழ்நாடு அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் வரும் 6-ம் தேதி மாலை இந்த விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .