2021 தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் பல வாக்குறுதிகள் நிறுவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை திமுக கடந்த சில நிமிடங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.