“மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை” – பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியது என்ன? – MaKa Stalin

221 0

 PMK Candidate: சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவு காணுகிறார்கள் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் கடலூர் தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணி, மயிலாடுதுறை தொகுதியில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், சேலத்தில் அண்ணாதுரை உள்ளிட்ட 10 நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நபர்கள், பாமக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ம.க.ஸ்டாலின், ஆதரவு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று கும்பகோணத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேரில் வந்து, அங்குள்ள பாஜக நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது, “எனது தந்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், என்னுடைய வாழ்க்கையே போராட்டம் என்ற ரீதியில் தொடங்கியது.

பிரதமர் மோடி 3வது முறையாக மீண்டும் அரியணை ஏறச் செய்ய வேண்டும். சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் எனக கனவு காணுகிறார்கள். இந்த மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை, மாறாக இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் பிரதமர் மோடிதான் போட்டியிடுகிறார் என எண்ணி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்தார்.

Related Post

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

Posted by - December 26, 2025 0
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில்…

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்

Posted by - January 1, 2023 0
நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.…

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

பெண்களுக்கான ஜாக்பாட் – ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி – யாருக்கு கிடைக்கும்?

Posted by - December 15, 2024 0
TAHDCO Loan Scheme: மகளிருக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் (Mahila Adhikarita Yojana) கீழ் கிடைக்கும், மத்திய அரசின் கடனுதவி திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். மகளிருக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *