சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

92 0

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் இன்று (டிசம்பர் 26) சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக அரசு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றைக் கோடி, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரம் அடையும் போராட்டங்கள்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையறை அற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. ஒப்பந்த செவிலியர்களும் 7 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்களும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, அதாவது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அந்த வகையில், எஸ்எஸ்டிஏ எனப்படும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று (டிசம்பர் 26) சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் பலர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடநூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்த நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர்.

மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் பாடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

தமிழகத்தில் நடமாடும் போதைப்பொருட்கள் – கொதிக்கும் ஓபிஎஸ்

Posted by - March 2, 2024 0
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாடும் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

சூப்பர்ஸ்டார்-னா ஒருத்தர் தான், தல-ன்னா.. லியோ மேடையில் விஜய் அதிரடி பேச்சு

Posted by - November 2, 2023 0
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என தொடர்ந்து சர்ச்சை வரும் நிலையில் அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். சூப்பர்ஸ்டார் ஒருத்தர் தான்.. “புரட்சி தலைவர்-னா ஒருத்தர்…

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - December 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்

Posted by - May 2, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம்…

வரி ஏய்ப்பு புகார் – போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Posted by - September 12, 2025 0
தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *