அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து உயர்ந்தே காணப்படும் என்றும் கன்னியாகுமரி, நீலகிரி, ஊட்டி, வால்பாறை ஆகிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வறண்ட நிலை மற்றும் எல் நினோ விளைவு ஆகியவை இந்த வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதீப் ஜான், அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது தட்பவெட்ப நிலை அப்படியே மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மே மாதம் இரண்டாவது வாரத்திலோ அல்லது மே மாத மத்திய பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். சென்னை, பாண்டிச்சேரி கடலூர், கடல் காற்று நமக்கு சாதகமாக வரும் இருந்தாலும் அந்த கடல் காற்று தரைப்பகுதிக்கு வருவதற்கு முன்பு இங்கு இருக்கக்கூடிய வெப்பநிலை அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அதனால்தான் வெப்பநிலை அதிகமாக இருப்பதை உணர முடிகிறது என்றும் தெரிவித்தார். இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.