திரைவாழ்க்கையிலும் நிஜ வாழக்கையிலும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சூர்யா – ஜோதிகா பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா . தனது கடின உழைப்பால் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் நடிகை ஜோதிகாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் சூர்யா இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர் . இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் முதன் முறையாக சேர்ந்து நடித்த இவர்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்ததால் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்தனர்.
திருமணத்திற்கு பின் திரையில் ஜோடி சேராத இவர்கள் எப்போது ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.
பல வருடங்களுக்கு பின் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் இந்த படத்தை பெங்களூரு டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் அல்லது சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹாலிதா சமீம் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நீண்ட நெடு நாட்களுக்கு பின் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து திரைப்படத்தில் நடிக்க உள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் புதுவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.