லீமா ரோஸை லெஃப் ரைட் வாங்கிய எடப்பாடி!
சென்னை: தமிழகத்தின் அடுத்த அரசை அமைக்கப் போவது விஜய் தான் என்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் கூட்டணி அமைக்க வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தமிழக வெற்றி கழகம். இந்த நிலையில் அதிமுக தவெக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் லால்குடி எம்எல்ஏவான லீமா ரோஸ்.
லீமா ரோஸ் பேச்சு இந்நிலையில், லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் பேசியது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளதூஉ, “அதிமுக – தவெக இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்” என்று கூறினார். எடப்பாடி கண்டிப்பு ஆனால் இந்தக் கருத்து வெளியானதும் அதிமுக கட்சிக்குள்ளேயே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, லீமா ரோஸை எடப்பாடி பழனிசாமி கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.எஸ். மணியன் வேறு விதமான கருத்தை தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தனது பணம் பலம் மற்றும் அவரது மருமகன் ஆதரவுடன் அதிமுக-வை பிளவுபடுத்த அவர்தான் காரணம் என கட்சியினர் வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.