தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பரபரப்பான அரசியல் சூழல்
நடந்து முடிந்த 17-வது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழலாம் என சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பலவிதமான வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
திமுக – அதிமுக ரகசியக் கூட்டணி வதந்திகள்
இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அரசியல் வட்டாரத்தில் ஒரு விசித்திரமான வதந்தி பரவியது. பரம்பரை எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. புதிய சக்தியான தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும், திராவிட அரசியலின் இருப்பைத் தக்கவைக்கவும் இரு கட்சிகளும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. “திராவிடக் கட்சிகள் ஒன்று சேர்கின்றன” என்ற சமூக வலைதள விவாதங்கள் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடிப் பதிவு
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தி, அனைத்து யூகங்களுக்கும் விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது”நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட வதந்திகள்
தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து நிலவி வந்த குழப்பங்களுக்கு இந்தப் பதிவு ஒரு முற்றுப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தரப்பிற்கு நாகரிகமான முறையில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததன் மூலம், எடப்பாடி பழனிசாமி ஒரு முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.