CM Vijay: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் அணிந்து வரும் கருப்பு கோட்- சூட், நெற்றியில் கருப்பு பொட்டிற்கான ரகசியம் என்ன.? என்பதை தற்போது பார்க்கலாம்.
அரசியலில் அசத்திய விஜய்
தமிழ் திரைத்துறை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மீது அதிக ஈடுபாடு கொண்டவதாக இருந்தவர் இதற்கு ஏற்றார் போல தனது திரைப்படங்களிலும் வசனங்களை இடம்பெற செய்தார். இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனையடுத்து விஜய் செல்லும் இடமெங்கும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கூடினார்கள்.
பாரம்பரியத்தை உடைத்த விஜய்
இந்த நிலையில் தான் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ளார் விஜய். அந்த வகையில் கடந்த 10ஆம் தேதி பதவியேற்ற விஜய், தமிழக அரசியல் தலைவர்கள் எப்போதும் அணிந்து வரும் வெள்ளை வேட்டி சட்டை என்ற பாரம்பரியத்தை உடைத்து கருப்பு கோட்-சூட் அணிந்து ஸ்டைலாக பங்கேற்றார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அடுத்தடுத்த தினங்களிலும் சட்டசபை நிகழ்வுகள் மற்றும் அரசு அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டத்திலும் கருப்பு கோட் மற்றும் கருப்பு பொட்டுடனே விஜய் கலந்து கொண்டார்.
கருபுப கோட்- சூட் ரகசியம் என்ன.?
இதனையடுத்து முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆடை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. குறிப்பாக விஜய் கடந்த சில வருடங்களாக ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை உடையவராக இருந்து வருகிறார். இதற்கு ஏற்றார் போல அவரது ஜோதிடருக்கு அரசு பதவியும் வழங்கினார். ஆனால் இதற்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அரசு பதவி அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் கருப்பு கோட்-சூட் அணிவது ஜாதக ரீதியாக அணிவதாக கூறப்பட்ட நிலையில், கருப்பு நிறம் என்பது அதிகாரம், ஆளுமை, தன்னம்பிக்கை, தனித்துவத்தை குறிப்பதாகவும் இதன் அடையாளமாகவே விஜய் கருப்பு கோட் சூட் அணிவதாகவும் தகவல் வெளியானது. விஜய்யின் இந்த கருப்பு கோட் சூட்டை பிரபல ஆடை வடிவமைப்பளரான சபீர் அகமது வடிவமைத்துள்ளதாகவும், இந்த ஒரு கோட் சூட்டின் விலைரூ.40,000 முதல் ரூ.70,000 வரை இருக்கும் என கூறப்படுகிறது.
கருப்பு பொட்டு சென்டிமென்ட் .?
இந்த நிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து தனது நெற்றியில் கருப்பு பொட்டுடன் காட்சி அளித்து வருகிறார். இதற்கான ரகசிய பின்னனி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விஜய்யின் நெற்றில் இருக்கும் கருப்பு பொட்டை அரகஜா திலகம் என கூறப்படுகிறது. அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் அரகஜா பொட்டை அதிகளவு வைப்பார்கள். இந்த அரகஜா திலகம் ஜவ்வாது,பச்சை கற்பூரம், புனுகு, வெட்டிவேர் ஆகியவற்றுடன் அரிய வகை மூலிகைகள் மற்றும் நறுமண பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இந்த அரகஜா திலகத்தை ஆன்மிகம் மற்றும் ஜாதகத்தை அதிகளவு நம்புபவர்கள் இந்த பொட்டை பயன்படுத்துகிறார்கள். இந்த அரகஜா திலகம் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள், வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நெற்றியில் திலகமாக வைத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தான் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய்யும் தனது நெற்றியில் அரகஜா திலகத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.