mks scaled

DMK: சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் – அறிவாலய கணக்கு?

43 0

DMK Stalin: சட்டமன்ற தேர்தலில் சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக, அதை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் கட்சியில் பல மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாம்.

DMK Stalin: திமுகவின் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த ஸ்டாலின் பரிசீலித்து வருகிறராம்.

திமுக கண்ட தோல்வி:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆன விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திடம், திமுக தனது ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய,  அறிவாலயம் தரப்பில் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில் சாதி மற்றும் மத ரீதியில் கட்சிக்கு இருந்த வாக்கு வங்கியை திமுக இழந்துள்ளது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக வலியுறுத்தப்பட்டுள்ளதாம். அதனை மீண்டும் வலுப்படுத்த கட்சியில் உடனடியாக பல மாற்றங்களை மேற்கொள்வது குறித்தும் தலைமை பரிசீலித்து வருகிறதாம்.

டேமேஜ் ஆன சாதி, மத வாக்கு வங்கி..

கட்சியின் திட்டங்கள் தொடர்பாக பேசிய திமுக நிர்வாகிகள், “சட்டமன்ற தேர்தலின் போது தனக்கு மக்களிடையே நிலவும் தனிப்பட்ட ஆதரவு என்பதை தாண்டி, சமூக பிரதிநிதித்துவ அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியதும் விஜயின் தவெகவிற்கு கிடைத்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனால் சாதி மற்றும் மதங்களை கடந்து மிகப்பெரிய அளவிலான வாக்குகளை இரண்டு வயது கட்சி அறுவடை செய்துள்ளது. அதேநேரம், காலம் காலமாக இருந்து வந்த சாதி மற்றும் மத அடிப்படையிலான திமுகவின் வாக்கு வங்கி வீழ்ச்சி கண்டது கட்சியின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாக அமைந்தது” என குறிப்பிடுகின்றனர்.

சிறுபான்மையினரின் வாக்குகளை கரைத்த விஜய்

விஜயின் வருகையால் கிறிஸ்துவ சமூக வாக்குகள் முழுமையாக தவெக பக்கம் சாய்ந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக உடன் பயணித்து வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது. இதனால் அறிவாலயத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்ட சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, கட்சியின் கட்டமைப்பில் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெற வேண்டிய கட்டாயத்திற்கு திராவிட கட்சி தள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் துணை பொதுச்செயலாளர்கள்:

திமுகவில் தற்போது கனிமொழி கருணாநிதி, ஐ. பெரியசாமி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, பொன்முடி மற்றும் சாமிநாதன் என மொத்தம் 7 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 10 உயர்த்தி சிறுபான்மை சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க தலைமை பரிசீலித்து வருகிறதாம். முக்குலத்தோர் சமுதாயத்திற்கு ஐ. பெரியசாமி மற்றும் திருச்சி சிவாவும், பட்டியலின சமுதாயத்திற்கு ஆ. ராசாவும்,  கவுண்டர் சமுதாயத்திற்கு சாமிநாதனும் மற்றும் அருந்ததியினர் சமுதாயத்திற்கு அந்தியூர் செல்வராஜும் பிரதிநிதிகளாக உள்ளனர். இந்நிலையில் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து நாடார், நாயுடு மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட உள்ளதாம்.

கட்சியில் அதிரடி மாற்றங்கள்:

தேர்தல் தோல்வியை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுக்களின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டதும், அதன் முடிவில் திமுகவில் பல முக்கிய மாற்றங்கள் அரங்கேற உள்ளனவாம். வயது மூப்பு காரணமாக துரைமுருகனை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறதாம். அப்படி நடந்தால் அந்த இடத்திற்கு வர டி.ஆர். பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். அந்த பதவி நிரப்பப்பட்ட பிறகு பல அதிரடி மாற்றங்கள், புதிய தலைமுறை வாக்காளர்களை குறிவைத்து முன்னெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Post

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…
vck

ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளையை சீராட்டி வளர்க்க போயிருக்கிறாரா? – திருமாவுக்கு எதிராக விசிகவுக்குள்ளேயே வெடிக்கும் விமர்சனம்

Posted by - May 24, 2026 0
‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை’ என்று விசிக தலைவர் திருமாவளவன் விவரித்திருக்கும் நிலையில், “ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைதான் விஜய்…

“வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் முதலமைச்சராகிவிட்டார்…” – அண்ணாமலை பேச்சு

Posted by - December 2, 2024 0
10 தலைவர்களின் புகைப்படத்தை போட்டால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளும் வந்துவிட்டதாக அண்ணாமலை சாடல். தாம் வெளியூர் சென்ற 3 மாத காலத்தில் ஒரு…

மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் – என்னென்ன?

Posted by - December 5, 2025 0
தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் குழு 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. அதற்கான…

அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!

Posted by - October 29, 2025 0
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *