Google Pay-க்கு குட்பை? தூக்க மாட்டோம்னு சொல்லிட்டு சுந்தர் பிச்சை பார்த்த வேலை.. இனிமேல் ஒன்னு ஒன்னா மாறும்!

253 0

கூகுள் நிறுவனம் அதன் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) ஆன கூகுள் வாலட்டை (Google Wallet) இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்தே.. “அப்போ இந்தியாவுல கூகுள் பே ஆப்பின் கதை முடிஞ்சதா?” என்கிற கேள்வி வலுவடைந்து கொண்டே போகிறது. கூடுதலாக, அமெரிக்காவில் கூகுள் பே ஆப் (Google Pay App) ஆனது ஷட்டவுன் (Shutdown) செய்யப்படுவதும், அதற்கு பதிலாக இனிமேல் கூகுள் வாலட்டை தான் பயன்படுத்த வேண்டும் என்கிற நடவடிக்கைகள் எல்லாம்.. இந்தியாவிலும் அது நடக்கும் என்கிற சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்துள்ளன.

இதற்கிடையில் சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் நிறுவனம் அதன் கூகுள் வாலட் சேவையில் “முக்கிய மாற்றங்களை” செய்துள்ளது. கூகுள் நிறுவனம் அப்படி என்ன செய்துள்ளது? இதனால் இந்தியாவில் உள்ள கூகுள் பே ஆப்பின் கதை முடியும் வாய்ப்புகள் உள்ளதா? கூகுள் வாலட் மற்றும் கூகுள் பேவிற்கு இடையே உண்மையிலேயே வேறுபாடு உள்ளதா? இதோ விவரங்கள்:

தற்போது வரையிலாக, டேப் அன்ட் பே வசதி (Tap and Pay Facility) வழியாக பணம் செலுத்திய பிறகு, குறிப்பிட்ட பரிவர்த்தனை குறித்த நோட்டிஃபிக்கேஷன்களுக்கு (Transaction notifications) கூகுள் பிளே சேவைகள் (Google Play Services) தான் பொறுப்பாகும். ஆனால் கூடிய விரைவில் அந்த பொறுப்பை கூகுள் வாலட் எடுத்துக்கொள்ள உள்ளது.யூசர் எக்ஸ்பீரியன்ஸை (User Experience) மேம்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட் வழியாக கூகுள் வாலட் ஆப் ஆனது நேரடி பயன்பாட்டு அறிவிப்புகளை (Direct App Notifications) வெளியிட தொடங்கியுள்ளது. அதாவது ட்ரான்ஸ்சாக்ஷசன்ஸ் (Transactions), அப்டேட்ஸ் (Updates), ஆஃபர்ஸ் (Offers) மற்றும் டிப்ஸ் (Tips) தொடர்பான நோட்டிஃபிக்கேஷன்கள், கூகுள் பிளே சேவைகள் மூலமாக இல்லாமல் கூகுள் வாலட் ஆப் வழியாகவே கிடைக்கும்இப்படியாக கூகுள் நிறுவனம் அதன் கூகுள் வாலட்-ஐ நாளுக்கு நாள் மேம்படுத்தி கொண்டே வருகிறது; ஒருகட்டத்தில் இது கூகுள் பே ஆப்பை விட சிறந்த மற்றும் பரந்த அளவிலான நன்மைகள் மற்றும் வசதிகள் (Benefits and Features) கொண்ட ஆப் ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; இதன் விளைவாக கூகுள் பே பயனர்கள் தானாகவே முன்வந்து கூகுள் வாலட் ஆப்பிற்கு இடம்பெயர்ந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை! கூகுளின் கூற்றுப்படி, அமெரிக்காவை போல் இல்லாமல் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் (India and Singapore) கூகுள் பே ஆப் ஆனது ஒரு ஸ்டான்ட்அலோன் ஆப் (Standalone App) ஆக தொடர்ந்து வேலை செய்யும். ஏனென்றால் இவ்விரு நாடுகளிலும் கூகுள் பே ஆப் யூசர்களின் எண்ணிக்கை மற்றும் கூகுள் பே ஆப்பின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதை கூகுள் நிறுவனம் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இருப்பினும் கூகுள் பே சேவைகள் ஷட்டவுன் செய்யப்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு.. எளிமையாக கூகுள் வாலட்டிற்கு இடம்பெயரும் வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதையும்.. கூகுள் பேவில் உள்ள பேலன்ஸை (Balance) கூகுள் வாலட்டிற்கு டிரான்ஸ்பர் செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுப்பதையும் பார்த்தால்.. எப்போது வேண்டுமானாலும்.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது. கூகுள் வாலட் மற்றும் கூகுள் பேவிற்கு இடையே உண்மையிலேயே வேறுபாடு உள்ளதா? உள்ளது! கூகுள் வாலட் ஆப்பில் பணம் செலுத்துதல் (Payment Related features) தொடர்பான எந்த அம்சங்களும் இல்லை. ஆனால் கூகுள் பே ஆப் ஆனது பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்த பயன்படுத்தப்படுகிறது. ஒரு செய்திக்குறிப்பில் “கூகுள் வாலட் ஆனது கூகுள் பே ஆப்பை நிறைவு செய்கிறது (Google Wallet complements Google Pay)” என்று கூகுள் தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Related Post

பொழுதுபோக்கிற்காக தினமும் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் துபாய் கோடீஸ்வரி பெண்

Posted by - June 2, 2023 0
துபாய்: இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது…

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

Posted by - July 11, 2023 0
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக புவியியல்…

ஏர்செல் ஓனருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா? ரூ.40,000 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு ***வியாக மாறிய கதை!

Posted by - August 25, 2023 0
உலக பணக்காரர்களில் முதன்மையான ஒருவரின் மகன் 40,000 கோடி சொத்துகளை வேண்டாம் என்று விலகி துறவியாகியுள்ளார். அவரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகின் மாபெரும் பணக்காரர்கள்,…

பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!

Posted by - April 24, 2025 0
பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூட்டத்தின் இறுதியில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான்…

திருட வந்த இடத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடிய வாலிபர்

Posted by - August 9, 2023 0
வீடுகளில் நாய் வளர்ப்பதற்கு முக்கிய காரணம் திருடர்களிடம் இருந்து வீட்டை காக்கும் என்பது தான். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *