தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மகளிர் இடஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையாது என்று தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவால் யாருக்கும் பாதகம் ஏற்படாது என்று உறுதிமொழி வழங்க தயார் என்றும், இதற்கு தமிழில் பொருத்தமான வார்த்தை இருந்தால் அதை பயன்படுத்த தயார் என்றும் பிரதமர் கூறினார்.
தொகுதிகள் சதவிகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது, அனைவருக்கும் சமமான விகிதாச்சாரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.