Mohan G Arrest: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைப் பேச்சு.. இயக்குநர் மோகன் ஜி கைது!

233 0

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது சாதி ரீதியிலான முத்திரை குத்தப்பட்டாலும் தொடர்ச்சியாக சினிமாவில் தன்னுடைய திறமையாலும், தான் பார்த்த, தன்னை பாதித்த சமூக நிகழ்வுகளையும் மையப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார். இவரது படம் வெளியாகும் போதெல்லாம் அதில் பேசப்படும் கதைக்களம், காட்சிகள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகும்.

இயக்குநர் மோகன் ஜி: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ் திரையலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது சாதி ரீதியிலான முத்திரை குத்தப்பட்டாலும் தொடர்ச்சியாக சினிமாவில் தன்னுடைய திறமையாலும், தான் பார்த்த சமூக நிகழ்வுகளையும் மையப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார். இதனிடையே மோகன் ஜி ஒரு பேட்டியில், “நாம் பெரிதாக நினைக்கும் ஒரு கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலந்திருப்பதாக செவி வழி செய்திகளை கேட்டிருக்கிறேன். ஆனால் இது தொடர்பான செய்திகளை வெளியிடாமல் தடுத்து உடனடியாக அந்த பிரச்சினையை சரி செய்து வேறு மாதிரி வழக்காக பதிவு செய்து அதனை மறைத்து விட்டார்கள்” என தெரிவித்திருந்தார்.

பழனியில் தரம் இல்லாத பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை வைத்து பேசிய மோகன் ஜி. “அந்த தரம் இல்லாத விஷயம் என்னவென்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்தார்களா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “எனக்கு அங்கு வேலை செய்பவர்கள் தெரிந்தவர்கள் சொன்ன விஷயம் என்னவென்றால் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதாக கூறினார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லா இடத்திலும் நடக்கிறது என தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து இன்று காலை இயக்குநர் மோகன்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.இப்படியான நிலையில் பாமக செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப்பதிவில், “இயக்குனர் மோகன் கைது தொடர்பாக அண்ணன் வழக்கறிஞர் பாலு அவர்கள் தமிழக உயர் காவல் துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்

எழுந்த சர்ச்சை.. அளித்த விளக்கம்

முன்னதாக உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக ஆந்திர மாநில அரசு திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியது. லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் தான் இந்த கலப்படம் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்யும் திண்டுக்கலைச் சேர்ந்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது.

இப்படியான நிலையில் திருப்பதியில் லட்டு விஷயத்தில் எழுந்த பிரச்னை தீர உடனடியாக யாகம் வளர்க்கப்பட்டு கோயில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் எனவும் தேவஸ்தானம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், திருப்பதியில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் இது போன்ற விஷயம் நடைபெற்று இருப்பதாக தகவல் பரவியது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் நெய் திண்டுக்கலைச் சேர்ந்த ஆவின் நிறுவனம் தான் வழங்குகிறது. திருப்பதிக்கு நெய் வழங்கும் நிறுவனம் வழங்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்தார். மேலும் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் அனைத்து பொருட்களும் தரமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவதூறு செய்தி பரப்பியவர்கள் மீதும், இனிமேல் பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து இந்த தகவலுக்கு விளக்கம் அளித்த தமிழக அரசு பழனி பஞ்சாமிர்தத்தில் அப்படி எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- உதயநிதி பதிவு …

Posted by - November 30, 2022 0
பிறந்த நாள் அன்று என்னை வாழ்த்திய, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியினர், மாற்றுத்திறனாளி தோழர்கள், திருநங்கை-திருநம்பிகள், கலைத்துறையினர், சமூக வலைதள தன்னார்வலர்கள், பத்திரிகை மீடியாவினர்…

நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

Posted by - March 15, 2023 0
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார். 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு…

இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்.. அசால்ட்டா இருக்காதீங்க..

Posted by - January 9, 2024 0
உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இறந்தும் வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமற்ற…

சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்

Posted by - December 12, 2023 0
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என…

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *