tntet

TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு

39 0

அரசின் முடிவை வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை டெட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணித் தொடர்ச்சி மற்றும் பதவி உயர்வு தொடர்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் 01-09-2025 அன்று வழங்கிய தீர்ப்பு, நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்தத் தீர்ப்பில், கல்வி உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குட்பட்ட பணியில் உள்ள ஆசிரியர்களும் TET தகுதி பெற வேண்டும் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக் காலம் மீதமுள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் என்றும், பதவி உயர்வுக்கும் TET தகுதி அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

டெட் தேர்வு கடினம்

இதைத் தொடர்ந்து பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை மாநில அரசே நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு அண்மையில் நடைபெற்ற நிலையில், டெட் தேர்வு கடினமாக இருந்ததாக புகார்க் குரல்கள் எழுந்தன.

தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வந்தது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க கோரி சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கொள்கை முடிவு எடுக்க அவகாசம்

இந்த வழக்கு இன்று (ஜூலை 8ஆம் தேதி) நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ’’பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க உள்ளது. இதனால் அவகாசம் தேவை’’ என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இடைக்காலத் தடை

இதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா, ”அரசின் முடிவை வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது” எனக் கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Post

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!

Posted by - April 22, 2024 0
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித…

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - October 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

Posted by - April 23, 2024 0
தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

Posted by - March 13, 2025 0
திமுக தலைமயிலான தற்போதைய தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். தமிழ்நாடு அரசு பட்ஜெட்: மத்திய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து, தமிழ்நாடு…

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025 0
தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *