அரசின் முடிவை வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை டெட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணித் தொடர்ச்சி மற்றும் பதவி உயர்வு தொடர்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் 01-09-2025 அன்று வழங்கிய தீர்ப்பு, நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.