Generated Image February 09 2026 9 54AM

டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

70 0

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது என டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்

தினந்தோறும் மது விற்பனையானது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் சுமார் 4000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலங்களில் மது விற்பனை நாளொன்றுக்கு 150 முதல் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே வார நாட்களில் மது விற்பனையானது 100 கோடியை எட்டுகிறது. எனவே மது விற்பனையின் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. இதன் மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசுக்கு உதவியாக உள்ளது.

மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் 10ரூபாய்

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமானது தொடங்கபட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முதலில் மலைப்பகுதிகளில் மட்டும் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வைக்க இட வசதி உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் சிறிய இடத்திலையே மதுபான கடைகள் உள்ளது. எனவே மதுபான பாட்டில்களை எப்படி பாதுகாப்பாக வைக்க முடியும் எனக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் பல கடைகள் கடந்த வாரம் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உரிய சலுகைக்கள் வழங்க வேண்டும்,  தொகுப்பூதியம் முறை மாற்றப்பட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அழைத்து அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக போராட்டடக்குழுவினர் டாஸ்மாக் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படவுள்ளதாக போராட்ட குழு தெரிவித்துள்ளது.

Related Post

பசிக்கு சாப்பாடு போட்டவரையே துடிதுடிக்க கொன்ற வாலிபர்கள்- போலீசில் வாக்குமூலம்

Posted by - March 30, 2023 0
கோவை: கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து…

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Posted by - June 20, 2023 0
தென்காசி: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழை காலங்களில்…

நடிப்பது மட்டுமே நாடாள தகுதி என்பது அவமானம் – சீமான் விமர்சனம்

Posted by - June 18, 2023 0
திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது என சீமான்…

ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

Posted by - August 26, 2024 0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது. கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *