ஆட்சி, அதிகாரத்தில் பங்கு – தவெக மாநாட்டில் விஜய் போட்ட அரசியல் அணுகுண்டு

168 0

தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்கள் கொள்கை, கோட்பாடுகளையும், செயல்திட்டங்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் தங்கள் கட்சியின் செயல்திட்டங்களை விளக்கும்போது பேசிய விஜய், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கான பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதை உறுதி செய்ய அதற்காக தனித்துறை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் ஏற்றத்தாழ்வில்லாத கல்வி, மருத்துவம், இடஒதுக்கீடு என எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய அதை அடிப்படை உரிமையாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுதான் சமூகநீதிக்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி வரும் 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சியை அமைக்கும். இருந்தாலும் நம்மை தேடி வரக்கூடியவர்களை நம்முடன் அரவணைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தரப்படும்” என்றார்.தமிழ்நாட்டில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.இந்த நிலையில் விஜய்யின் அறிவிப்புக்கு பிறகு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல்கள் தமிழ்நாட்டில் எழத்தொடங்கியுள்ளது எனவும் இனி தமிழ்நாட்டின் அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Post

பிரபல யூடியூபர் இர்பானுக்கு கருணை காட்டாதீங்க.. கொந்தளித்த பிரபலம்

Posted by - May 28, 2024 0
ரபல யூடியூபர் இர்பான் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் சிசு ஆணா…

மாசி மகத்தன்று கும்பகோணம் ‘மகாமகம்’ குளத்தில் நீராடினால்… உண்மையில் நம் பாவங்கள் நீங்குமா?

Posted by - February 24, 2023 0
கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம். புராணங்களில் பல விஷயங்கள்…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

2025 முடிவுக்கு முன் Tamil Nadu-வில் நடந்த முக்கிய 10 மாற்றங்கள் – Technology, Health, Lifestyle updates!

Posted by - December 12, 2025 0
2025 முடிவுக்கு வந்துட்டோம். இந்த வருடம் technology, health, education, lifestyle, economy எல்லாத்திலும் பெரிய மாற்றங்கள் நடந்துது. Tamil Nadu-வில் இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட,…

மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்களுக்கு வரப்போகுது குட்நியூஸ்- எப்போ தெரியுமா.?

Posted by - November 14, 2025 0
அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பழையை ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முக்கிய முடிவு வெளியாகவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *