ஆட்சி, அதிகாரத்தில் பங்கு – தவெக மாநாட்டில் விஜய் போட்ட அரசியல் அணுகுண்டு

167 0

தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு உண்டு என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்கள் கொள்கை, கோட்பாடுகளையும், செயல்திட்டங்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் தங்கள் கட்சியின் செயல்திட்டங்களை விளக்கும்போது பேசிய விஜய், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கான பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதை உறுதி செய்ய அதற்காக தனித்துறை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் ஏற்றத்தாழ்வில்லாத கல்வி, மருத்துவம், இடஒதுக்கீடு என எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய அதை அடிப்படை உரிமையாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுதான் சமூகநீதிக்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.

தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என தெரிவித்தார். அதன்படி வரும் 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சியை அமைக்கும். இருந்தாலும் நம்மை தேடி வரக்கூடியவர்களை நம்முடன் அரவணைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தரப்படும்” என்றார்.தமிழ்நாட்டில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.இந்த நிலையில் விஜய்யின் அறிவிப்புக்கு பிறகு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல்கள் தமிழ்நாட்டில் எழத்தொடங்கியுள்ளது எனவும் இனி தமிழ்நாட்டின் அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Post

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - December 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

சர்க்கரை நோயாளிகள்.. பேரீச்சம் பழம் சாப்பிடலாமா.. பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்னாகும்? அட ஆச்சரியம்

Posted by - December 5, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? இந்த பழத்தை சாப்பிட்டால் என்னாகும்? தித்திப்பு நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம்…

ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

Posted by - April 7, 2025 0
தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கே.என். நேரு…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Posted by - September 12, 2023 0
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புள்ளவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்கள்…

விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி..

Posted by - March 11, 2026 0
விஜய் குறித்து நான் பேச வேண்டிய நிலை வந்தால் தயார் என தன் மீதான் விமர்சனங்களுக்கு இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார். விஜய் விவகாரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *