ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

248 0

பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் எழுதிய கடிதம்:

இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து போராட்டத்தை இன்று நடத்திய நிலையில், அரசியல் களத்திற்கு புதியதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் யாரும் எதிர்பாராத வகையில் இன்று ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநரைச் சந்தித்தது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மாணவிகளுக்கு ஒரு அண்ணனாக தன்னை உருவகப்படுத்தி கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதி வெளியிட்டார்.

விஜய் வெளியிட்ட கடிதம் தீயாய் இணையத்தில் பரவி வரும் சூழலில், அவர் எழுதிய கடிதத்தை தவெக தொண்டர்கள் மக்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள கல்லூரி முன்பு விஜய் எழுதிய கடிதத்தை தவெக மகளிரணியினர் விநியோகித்தனர்.

புஸ்ஸி ஆனந்த் கைது:

அப்போது, அவர்களையும் அவர்கள் உடனிருந்த தவெக ஆண் நிர்வாகிகளையும் காவல்துறையினர் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக கூறி கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலும்  விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை தவெக-வினர் தி.நகரில் விநியோகித்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏராளமான தவெக நிர்வாகிகள் மண்டபத்தின் முன்பு குவிந்தனர். போலீசார் அவர்களையும் கைது செய்து பேருந்தில் ஏற்றி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகளும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

அடுத்தடுத்து பரபரப்பு:

இன்று மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தக்கோரியும், யார் அந்த சார்? என்ற கோஷங்கள் எழுப்பியும் அ.தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், அரசியல் களத்தில் புதியதாக வருகை தந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது காய்களை நகர்த்தத் தொடங்கியிருப்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் முதல்படியாகவே ஆளுநர் சந்திப்பு, புஸ்ஸி ஆனந்த் கைது அரங்கேறியுள்ளது.

Related Post

ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

Posted by - February 18, 2025 0
ஆசிரியர் பணி நியமனத்திற்கு இனி ”காவல்துறை சரிபார்ப்பு சான்று” கட்டாயமாக்கப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்…

520 கிமீ தூரம்.. 12கிமீ வேகம்.. நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!

Posted by - December 8, 2022 0
Cyclone Mandous | டெல்டா மற்றும் கடலூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த…

அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு

Posted by - July 1, 2025 0
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 2 நாட்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு…

வாட்டி வதைக்கப்போகும் வெயில்..! மக்களே உஷார்

Posted by - April 11, 2023 0
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5…

பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

Posted by - May 2, 2023 0
‘உங்களில் ஒருவன் பதில்கள் ’ பதிவில் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஓர் ஆடியோ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *