ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

247 0

பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் எழுதிய கடிதம்:

இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து போராட்டத்தை இன்று நடத்திய நிலையில், அரசியல் களத்திற்கு புதியதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் யாரும் எதிர்பாராத வகையில் இன்று ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநரைச் சந்தித்தது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மாணவிகளுக்கு ஒரு அண்ணனாக தன்னை உருவகப்படுத்தி கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதி வெளியிட்டார்.

விஜய் வெளியிட்ட கடிதம் தீயாய் இணையத்தில் பரவி வரும் சூழலில், அவர் எழுதிய கடிதத்தை தவெக தொண்டர்கள் மக்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள கல்லூரி முன்பு விஜய் எழுதிய கடிதத்தை தவெக மகளிரணியினர் விநியோகித்தனர்.

புஸ்ஸி ஆனந்த் கைது:

அப்போது, அவர்களையும் அவர்கள் உடனிருந்த தவெக ஆண் நிர்வாகிகளையும் காவல்துறையினர் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக கூறி கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலும்  விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை தவெக-வினர் தி.நகரில் விநியோகித்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏராளமான தவெக நிர்வாகிகள் மண்டபத்தின் முன்பு குவிந்தனர். போலீசார் அவர்களையும் கைது செய்து பேருந்தில் ஏற்றி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகளும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

அடுத்தடுத்து பரபரப்பு:

இன்று மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தக்கோரியும், யார் அந்த சார்? என்ற கோஷங்கள் எழுப்பியும் அ.தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், அரசியல் களத்தில் புதியதாக வருகை தந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது காய்களை நகர்த்தத் தொடங்கியிருப்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் முதல்படியாகவே ஆளுநர் சந்திப்பு, புஸ்ஸி ஆனந்த் கைது அரங்கேறியுள்ளது.

Related Post

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

Posted by - November 9, 2023 0
புதுடெல்லி: வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை…

தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடு – வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்வீட்..!!

Posted by - October 10, 2024 0
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில்…

பல ஆண்களுடன் தொடர்பு.. மருமகன் உதவியுடன் மகளை கொன்ற தாய் – 3 மாதத்துக்கு பின் சிக்கியது எப்படி?

Posted by - December 1, 2022 0
சென்னை காசிமேடு பெண் கொலையை தற்கொலை என நாடகமாடிய குடும்பத்தினர் போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை நாகூரான்…

‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!

Posted by - June 4, 2025 0
”பொன்முடி மீது நடவடிக்கை எ டுக்கவில்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் மற்ற நிர்வாகிகளின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இது பற்றி…

உஷார்: அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 32 மாவட்டங்களில் மழை.. எங்கெங்கு தெரியுமா?

Posted by - October 14, 2024 0
TN Rain | 16 – 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *