எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்..

120 0

கடந்த ஓராண்டாகவே மீனாட்சி, புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாசலில் வாகனம் நிறுத்துவது தொடங்கி, தெருவை கூட்டி சுத்தம் செய்து கோலம் போடுவது வரை பிரச்னை மேல் பிரச்னை ஏற்பட்டது

திருச்சி அருகே எதிர் வீட்டில் வசிக்கும் குடும்பத்துடன் ஏற்பட்ட சண்டையில் நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரின் செயலுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இயலாமையை வெளிக்காட்ட தாக்குதல்

பொதுவாகவே குடும்ப உறவுகளோ, அலுவலகமோ, அண்டை வீட்டில் வசிப்பவர்களோ யாராக இருந்தாலும் எல்லா நேரமும் அன்போடு இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. சண்டை, சச்சரவுகள் என்பது அனைத்து உறவுகளிலும் இயல்பானது. பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது. ஆனால் பழி வாங்குகிறேன் என்ற பெயரில் வஞ்சம் தீர்ப்பதில் சிலரை அடித்துக் கொள்ளவே முடியாது. தங்கள் இயலாமையை வெளிகாட்ட முடியாமல் கொடூரமான செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கொடூரமான தாக்குதலில் பலியான நாய்க்குட்டிகள்

திருச்சி மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் கம்பரசம்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள வெள்ளாந்தெருவில் ஜெய் கணேஷ் என்பவர் தனது மனைவி மீனாட்சி மிஸ்ரா என்ற 28 வயது பெண்ணுடன் வசித்து வருகிறார். ஜெய் கணேஷ் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு எதிர் வீட்டில் தனியார் நிறுவனத்தில் கணேஷ் பிரபு என்பவர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாகவே மீனாட்சி, புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாசலில் வாகனம் நிறுத்துவது தொடங்கி, தெருவை கூட்டி சுத்தம் செய்து கோலம் போடுவது வரை பிரச்னை மேல் பிரச்னை ஏற்பட்டது. இப்படியான நிலையில் கடந்த மார்ச் 4ம் தேதி வீட்டின் முன் கோலம் வரைவதற்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரி, ஒரு கல்லை எடுத்து மீனாட்சியை நோக்கி வீச அது தவறுதலாக 3 வயது மகன் மீது பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. புவனேஸ்வரியின் இந்த செயலால் கடும் கோபமடைந்த மீனாட்சி மிஸ்ரா, புவனேஸ்வரி  வீட்டில் வளர்த்து வந்த நாய் ஈன்ற குட்டிகளை ஈவு ஈரக்கமின்றி சுவற்றில் வீசி கொடூரமாக கொன்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது. சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி அளித்த புகார் அடிப்படையில் மீனாட்சியையும், சிறுவனை தாக்கியதாக ஜெய்கணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் புவனேஸ்வரியையும் திருச்சி ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர்.

டென்ஷனான விஜய் ஆண்டனி

மீனாட்சி தன் வீட்டின் முன்னால் நாய், மாடு என எது நின்றாலும் கம்பு அல்லது கல்லால் அடித்து விரட்டும் கொடூர குணம் கொண்டவராக இருந்துள்ளார். அதற்கான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

 

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மீனாட்சியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி “இதுதான் மனிதநேயமா?” என கேள்வியெழுப்பும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related Post

எம்.ஜி.ஆர்., ஆக முயன்று தோற்ற மு.க. முத்து – தந்தை கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. ஜெ., உதவி

Posted by - July 19, 2025 0
மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி. ஆரை போலவே திரைப்படங்களில் நடித்து பிரபலமாக முயன்று மு.க. முத்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. MK Muthu Died: மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு

Posted by - May 29, 2025 0
தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தன்னை சந்திக்க யாரும்…

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் : சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Posted by - June 26, 2024 0
  2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 3…

இம்மாதம் அதிக குளிர்: குளிர் குறைக்க எளிய முறைகள்..

Posted by - December 20, 2025 0
இந்த டிசம்பர் அதிக குளிர் காரணமாக உங்கள் உடல் பாதுகாப்புக்கு எளிய வீட்டுக்கூடும் வழிகள், உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முறைகள். இப்போது குளிர் பாதிப்பை குறைக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *