t20

வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா?

193 0

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப்யாதவ் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.

இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்திய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்றைய இறுதிப்போட்டியில் மோதுகிறது.

வருணுக்குப் பதில் குல்தீப்பா?

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் இந்த டி20 உலகக்கோப்பையில் பந்துவீச்சு சற்றும் கவலை அளிக்கும் வகையிலே உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசியதன் காரணமாகவே இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

குறிப்பாக, இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ரன்களை வாரி இறைத்து வருகிறார். இந்திய – நியூசிலாந்து ஆகிய இரு அணிகளிலும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணியே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக இந்த போட்டியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன காரணம்?

ஏனென்றால், வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முதல் 4 போட்டிகளிலே 9 விக்கெட்டுகளை அவர்  கைப்பற்றினார். ஆனால், அடுத்த 4 போட்டிகளில் 16 ஓவர்கள் வீசி 179 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 4 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். முக்கியமான போட்டியான சூப்பர் 8 மற்றும் அரையிறுதியில் அவரது பந்துவீச்சை எதிரிணியினர் நொறுக்கியுள்ளனர்.

குல்தீப்யாதவ் இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே களமிறங்கினார். அந்த போட்டியில் அவர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். அதன்பின்பு, அவர் பெஞ்சிலே உட்காரவைக்கப்பட்டு வருகிறார்.

யார் பெஸ்ட்?

குல்தீப் யாதவ் இதுவரை 54 டி20 போட்டிகளில் ஆடி 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 6.95 எகானமியாக வைத்துள்ளார். வருண் சக்கரவர்த்தி 44 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 7.45 எகானமியாக வைத்துள்ளார். இன்றைய மைதானம் பெரிய மைதானம் என்பதாலும், பேட்டிங்கிற்கும் ஒத்துழைக்கும் என்பதால் பந்துவீச்சில் திறமையான அணியாக இந்திய அணி களமிறங்க வேண்டியது அவசியம் ஆகும்.

நியூசிலாந்து டிம் செஃய்பெர்ட், ஃபின் ஆலன், கிளென் பிலிப்ஸ், சாப்மன், மிட்செல், நீஷம் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரவீந்திரா, சான்ட்னரும் களத்தில் நிலைத்துவிட்டால் அதிரடியில் மிரட்டுவார்கள். இதனால், இந்திய அணி அவர்களுக்கும் இடம் தராத வகையில் பந்துவீசவே விரும்பும். கடந்த அரையிறுதியில் நியூசிலாந்தின் தொடக்க ஜோடி டிம் செஃய்பெர்ட் – ஃபின் ஆலன் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கியது.

இதனால், இன்று இந்திய அணி தனது ப்ளேயிங் லெவனில் மிகுந்த கவனத்துடனே செயல்படும் என்று கருதப்படுகிறது.

Related Post

கோட்டையை இழந்த CSK, கோப்பை வரைக்கும் எப்புடி.. தோனியின் மீதே அதிருப்தி வர வைத்த சம்பவம்!

Posted by - April 6, 2025 0
Chennai Super Kings: படம் பிளாப் ஆனா என்ன தல ஸ்கிரீனில் வந்தா மட்டும் போதும். போட்டியில் தோத்தா என்ன தல ஆடிட்டோரியத்துக்கு வந்தா மட்டும் போதும். சென்னை…

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

“நாங்கள் செய்த ‘அந்த’ தவறு…” – இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா சொன்ன காரணம்!

Posted by - November 20, 2023 0
ICC World Cup 2023 : 2003-ஆம் ஆண்டைப் போல, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்களின் கோப்பை கனவு சுக்கு நூறாக உடைந்தது.…

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா….Sorry சர்பராஸ் கான்

Posted by - February 16, 2024 0
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், பட்டிதார் ஆகியோர் சொற்ப ரன்களில்…

கோட்டைவிட்ட வீரர்கள்… டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம் .

Posted by - November 23, 2022 0
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *