என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்…

151 0

நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.? யார் அப்படி கொடுப்பது என யேசிக்கிறீர்களா.? மத்திய அரசுதான். என்ன விவரம் தெரியுமா.?

மத்திய அரசின் BHIM யுபிஐ செயலியின் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கும் விதமாக, அந்த செயலி மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க, மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், பீம் யுபிஐ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பீம் செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க ஊக்கத்தொகை – மத்திய அரசு

இன்று மக்களிடையே பிரபலமாக இருக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகள், ஜி பே, பே.டி.எம், போன்பே போன்றவைதான். ஆனால், மத்திய அரசு பீம் என்ற யுபிஐ செயலி வைத்திருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது என்றே சொல்லலாம். அதன் பயன்பாடும் சொற்ப அளவே உள்ளது.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தில், இந்த பீம் யுபிஐ செயலியும் ஒன்று. சிறு வணிகர்களை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்குள் கொண்டுவர மத்திய அரசு உருவாக்கியதுதான் இந்த செயலி. தற்போது இதன் பயன்பாடு குறைவாக இருப்பதால், அதனை அதிகரிக்கும் வகையில், பீம் யுபிஐ மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க, மத்திய அரசு ரூ.1,500 கோடியை ஒதுக்கியுள்ளது.

ரூ.2000-க்குள் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை

இந்த திட்டத்தின் கீழ், மார்ச் 31-ம் தேதி வரை, பீம் யுபிஐ மூலம், ரூ.2000-த்திற்குள் வணிகர்களுக்கு பணம் செலுத்தியுள்ள தனி நபர்களுக்கு, 0.15 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இது தனி நபர் மற்றும் வணிகர்களிடையே நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் ஒரு பரிவர்த்தனை ரூ.2000-க்கு மேல் இருக்கக் கூடாது.

இந்த ஊக்கத் தொகை அனைத்து யுபிஐ வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்குவதால், அரசின் பீம் யுபிஐ செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஒவ்வொரு வருடமும், ரூ.2000-த்திற்கு கீழ் எத்தனை பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கணக்கிட்டு, மார்ச் 31-ம் தேதி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதேபோல், தற்போது, பெட்டிக் கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை செய்யப்பட்டுவரும் மற்ற அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

Posted by - September 28, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…

தினசரி பாதிப்பு மீண்டும் 300-ஐ தாண்டியது: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,076 ஆக உயர்வு

Posted by - March 8, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ந்தேதி 324 ஆக…

நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

Posted by - July 6, 2023 0
புதுடெல்லி: வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…

இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..!

Posted by - February 14, 2026 0
திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் குடும்பத்துடன் சேர்ந்து 33 வயது காதலியை கொலை செய்து, உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு: இந்தியாவில் புற்றுநோய்க்கு 8 லட்சம் பேர் பலி

Posted by - July 29, 2023 0
புதுடெல்லி : மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *