என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்…

164 0

நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.? யார் அப்படி கொடுப்பது என யேசிக்கிறீர்களா.? மத்திய அரசுதான். என்ன விவரம் தெரியுமா.?

மத்திய அரசின் BHIM யுபிஐ செயலியின் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கும் விதமாக, அந்த செயலி மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க, மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், பீம் யுபிஐ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பீம் செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க ஊக்கத்தொகை – மத்திய அரசு

இன்று மக்களிடையே பிரபலமாக இருக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகள், ஜி பே, பே.டி.எம், போன்பே போன்றவைதான். ஆனால், மத்திய அரசு பீம் என்ற யுபிஐ செயலி வைத்திருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது என்றே சொல்லலாம். அதன் பயன்பாடும் சொற்ப அளவே உள்ளது.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தில், இந்த பீம் யுபிஐ செயலியும் ஒன்று. சிறு வணிகர்களை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்குள் கொண்டுவர மத்திய அரசு உருவாக்கியதுதான் இந்த செயலி. தற்போது இதன் பயன்பாடு குறைவாக இருப்பதால், அதனை அதிகரிக்கும் வகையில், பீம் யுபிஐ மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க, மத்திய அரசு ரூ.1,500 கோடியை ஒதுக்கியுள்ளது.

ரூ.2000-க்குள் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை

இந்த திட்டத்தின் கீழ், மார்ச் 31-ம் தேதி வரை, பீம் யுபிஐ மூலம், ரூ.2000-த்திற்குள் வணிகர்களுக்கு பணம் செலுத்தியுள்ள தனி நபர்களுக்கு, 0.15 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இது தனி நபர் மற்றும் வணிகர்களிடையே நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் ஒரு பரிவர்த்தனை ரூ.2000-க்கு மேல் இருக்கக் கூடாது.

இந்த ஊக்கத் தொகை அனைத்து யுபிஐ வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்குவதால், அரசின் பீம் யுபிஐ செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஒவ்வொரு வருடமும், ரூ.2000-த்திற்கு கீழ் எத்தனை பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கணக்கிட்டு, மார்ச் 31-ம் தேதி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதேபோல், தற்போது, பெட்டிக் கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை செய்யப்பட்டுவரும் மற்ற அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயம் என பேச்சு- பவன் கல்யாணுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Posted by - July 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:- ஆந்திராவில் கடந்த 4…

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

Posted by - August 7, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில்…

கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று…
s 6

Air India’s Biggest Mistake! ✈️ டெல்லி To கனடா.. ஆனா நடந்தது வேற! 🛑

Posted by - March 21, 2026 0
டெல்லியிலிருந்து கனடாவுக்கு (Vancouver) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், சுமார் 4 மணிநேரம் பறந்து சீனா வான்வெளி வரை சென்ற நிலையில், திடீரென டெல்லிக்கே திரும்பியது…

வங்கியில் லோன் வாங்கப்போறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை எல்லாம் தெரிஞ்சிவச்சிக்கோங்க!

Posted by - October 29, 2024 0
லோன் வாங்கும்போது, நீங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லை என்றால் கடன் வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் நீங்கள் கருத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *