என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்…

150 0

நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.? யார் அப்படி கொடுப்பது என யேசிக்கிறீர்களா.? மத்திய அரசுதான். என்ன விவரம் தெரியுமா.?

மத்திய அரசின் BHIM யுபிஐ செயலியின் பயன்பாட்டை அதிகரிக்க வைக்கும் விதமாக, அந்த செயலி மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க, மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், பீம் யுபிஐ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பீம் செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க ஊக்கத்தொகை – மத்திய அரசு

இன்று மக்களிடையே பிரபலமாக இருக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலிகள், ஜி பே, பே.டி.எம், போன்பே போன்றவைதான். ஆனால், மத்திய அரசு பீம் என்ற யுபிஐ செயலி வைத்திருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது என்றே சொல்லலாம். அதன் பயன்பாடும் சொற்ப அளவே உள்ளது.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தில், இந்த பீம் யுபிஐ செயலியும் ஒன்று. சிறு வணிகர்களை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்குள் கொண்டுவர மத்திய அரசு உருவாக்கியதுதான் இந்த செயலி. தற்போது இதன் பயன்பாடு குறைவாக இருப்பதால், அதனை அதிகரிக்கும் வகையில், பீம் யுபிஐ மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்க, மத்திய அரசு ரூ.1,500 கோடியை ஒதுக்கியுள்ளது.

ரூ.2000-க்குள் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை

இந்த திட்டத்தின் கீழ், மார்ச் 31-ம் தேதி வரை, பீம் யுபிஐ மூலம், ரூ.2000-த்திற்குள் வணிகர்களுக்கு பணம் செலுத்தியுள்ள தனி நபர்களுக்கு, 0.15 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இது தனி நபர் மற்றும் வணிகர்களிடையே நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் ஒரு பரிவர்த்தனை ரூ.2000-க்கு மேல் இருக்கக் கூடாது.

இந்த ஊக்கத் தொகை அனைத்து யுபிஐ வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்குவதால், அரசின் பீம் யுபிஐ செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஒவ்வொரு வருடமும், ரூ.2000-த்திற்கு கீழ் எத்தனை பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கணக்கிட்டு, மார்ச் 31-ம் தேதி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதேபோல், தற்போது, பெட்டிக் கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை செய்யப்பட்டுவரும் மற்ற அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி கிலோ ரூ.250-க்கு விற்பனை

Posted by - July 8, 2023 0
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் 1…

பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில் தகவல்

Posted by - June 10, 2023 0
பெங்களூரு : பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,…

ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Posted by - June 3, 2023 0
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

Posted by - August 5, 2024 0
அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. வெள்ளிக்கிழமை…

ஆந்திராவில் ரூ.30 லட்சத்துக்கு தக்காளி விற்ற வியாபாரி கொலை

Posted by - July 13, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *