சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை : ஓட்டுநர் கைது!

195 0

தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல்
வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன், சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார்.

அண்மையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் வந்த ஜெகதீஸ்வரன், சிறுமியை தஞ்சாவூருக்கு அழைத்தார். இதையடுத்து தஞ்சாவூர் வந்த சிறுமியை அவர் சந்திக்க மறுத்ததால், அதிர்ச்சிக்குள்ளான சிறுமி புதிய பேருந்து நிலையம் அருகே அழுது கொண்டே இருந்துள்ளார்.

இதையறிந்த அன்னை சத்யா நகரை சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் புவனேஸ்வரன், சிறுமியை காதலனுடன் சேர்த்து வைப்பதாக ஏமாற்றி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், சிறுமியை சென்னைக்கு பேருந்து ஏற்றிவிட வந்தபோது போலீஸாரிடம் அவர் சிக்கினார். புவனேஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இதேபோல சிறுமியை ஏமாற்றிய காதலன் ஜெகதீஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.

Related Post

போதையால் சீரழிந்த THALAPATHY VIJAY-உடன் நடித்த நண்பன் போதையால் உள்ளே தள்ளிய போலீஸ் – நடந்தது என்ன?

Posted by - June 23, 2025 0
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் மோதல்…

சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சி நிகழ்ச்சியால் உடன்பிறப்புகள் உஷ்ணம்!

Posted by - January 13, 2024 0
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில்…

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

“ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” – அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை

Posted by - January 2, 2025 0
“பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.” மதுரை முக்குலத்தோர் இலவச…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *