திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

173 0

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜுன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன் 25ஆம் தேதி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து ஜூன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் புறக்கணிப்பு போராட்டத்தில் அனைத்து நிலை வருவாய் நிலை அலுவலர்களும் ஈடுபட உள்ளதாகவும் சுமார் 40 ஆயிரம் பேர் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எதற்காக இந்த போராட்டம்?

பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ( ஃபெரா அமைப்பு) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிருப்தி

2021ஆம் ஆண்டு திமுக அரசு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், அரசு காலி இடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன.

எனினும் இவை முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, அரசு ஊழியர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் அதிருப்தியில் உள்ளன. இந்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி, அவ்வப்போது இந்த சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஜூன் 25-ல் போராட்டம்

இந்த நிலையில், தங்களின் பணி பாதுகாப்பு, காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன் 25ஆம் தேதி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளதாக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Post

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

500 பள்ளிகள் தத்துகொடுப்பது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்

Posted by - January 2, 2025 0
அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொன்னோம். தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல்…

சட்ட விரோத பண பரிமாற்ற புகார்.. தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கியது யார்?

Posted by - September 26, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல ஊர்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில்…

மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

Posted by - March 11, 2025 0
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும்…

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது… மீனவர்களுக்கு எச்சரிக்கை…

Posted by - November 29, 2023 0
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *