நடிகர் ஶ்ரீ நிலமைக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் தான் காரணமா…வெளியான அதிர்ச்சித் தகவல்

225 0

நடிகர் ஶ்ரீ நடிப்பில் இறுதியாக வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு சம்பளம் தராததே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஶ்ரீ

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் வழியாக கவனமீர்த்தவர் நடிகர் ஶ்ரீ. பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் , வில் அம்பு , இறுக பற்று ஆகிய படங்கள் இவருக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்று தந்தன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஶ்ரீ அந்த நிகழ்ச்சியை விட்டு நான்கு நாட்களில் வெளியேறினார். ஶ்ரீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. உடல் மெலிந்த நிலையில் நீண்ட தலைமுடியும் ஶ்ரீ வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது உடல் நலத்தைப் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் அவர் பாலின  மாற்று சிகிச்சை செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீ நிலமைக்கு யார் காரணம்

சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ஶ்ரீக்கு இதுவரை பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தவிர அவர் நடித்த வில் அம்பு மற்றும் இறுக பற்று ஆகிய இரு படங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதே அவரது தற்போதைய  நிலைக்கு காரணம். ஶ்ரீ நடித்த இறுக பற்று திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்தது. இந்த தயாரிப்பு நிறுவனத்தை விமர்சித்து ஶ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்த இறுக பற்று படத்தில் நடித்ததற்கு அவமானப்படுகிறேன். நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உங்களால் நழுவிவிட முடிகிறது என்றால் நீங்கள் ரொம்ப சாமர்த்தியசாலிதான். என்னுடை சம்பளம் வந்துவிடும் என நானும் இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தேன். ” என அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஶ்ரீ தற்போது மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது அவர் மன நல சிகிச்சையில் இருந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். ஶ்ரீயின் குடும்பத்தினர் அவரை மீட்டு கொண்டு வர போராடி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ஶ்ரீக்கு சம்பளம் வழங்காத தயாரிப்பு நிறுவனம் மேல் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்ஸ் மத்தியில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Related Post

டாடா படத்திற்கு பிறகு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய கவின்.. எவ்ளோ தெரியுமா?

Posted by - March 16, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் கவின். இவர் சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். கவின் அதன் பின்…

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

விஜய்யின் வாரிசு ட்ரைலர் வெளியீடு எப்போது தெரியுமா?

Posted by - December 27, 2022 0
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது வாரிசு. தமிழ் சினிமாவில் வாரிசு ஃபீவர் தொடங்கிவிட்டது.…

அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்டர் வெளியானது..!!

Posted by - May 8, 2024 0
அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்…

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *