போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

225 0

Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம் எப்படி போகிறது என தெரியாமல் நிறைய பேர் சொந்த காசை இழந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான விருப்ப படிவங்களை பூர்த்தி செய்து இருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் அவர் அக்கவுண்டில் இருந்த 60,000 அபேஸ் ஆகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பேங்கில் இருந்து போன் பண்ணுகிறேன், வேலைவாய்ப்பு கொடுக்கிறோம், ஏடிஎம் லாக் ஆகிவிடும் என எக்கச்சக்க போன் கால்களில் பணத்தை சுருட்ட பல திட்டங்களை போட்டு இருக்கிறது நாச கும்பல்.

பணம் இழந்த பிறகு அதை மீண்டும் மீட்டெடுப்பது என்பது பெரிய விஷயம். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து, அது சைபர் க்ரைம் வழக்காக மாற்றி ஆளை கண்டுபிடிப்பதற்குள் பறிபோன பணத்தை விட அதிகமாகவே செலவாகி விடுகிறது.

தற்போது இந்த பிரச்சனைக்கு தமிழக காவல்துறை ஒரு புதிய வழியை சொல்லி இருக்கிறது. இது போன்ற சைபர் கிரைம் நடந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. 1930 நம்பர் இருக்கு போன் பண்ணி என்ன நடந்தது என்று சொன்னால் போதும்.

போன் தொலைந்து போனால் அந்த போனின் ஐபிஎம் நம்பரை கண்டுபிடித்து உடனே லாக் செய்து விடுகிறார்கள். அதேபோன்று திடீரென வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது என்றால் இந்த நம்பருக்கு புகார் கொடுத்தால் அந்த வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத அளவிற்கு லாக் செய்து விடுகிறார்கள். பணத்தை இழந்து பரிதவிபோருக்கு இது ஒரு பேருதவியாக இருக்கும்.

Related Post

கேரளாவில் 6 வயது மகளை கொடூரமாக வெட்டிக்கொன்ற தந்தை…

Posted by - June 9, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள்…

BSNL-க்கு புயல் வேகம்.. 3 மாதத்துல 36 லட்சம்.. 4ஜி மகிமை.. சிம் கார்டு வாங்கியாச்சா.. குஷியில் கஸ்டமர்கள்!

Posted by - December 20, 2024 0
அங்க அடிச்சா.. இங்க வலிக்கும்.. இந்த டயலாக் இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு பக்காவாக பொருந்திவிட்டது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம்…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

Posted by - August 23, 2024 0
பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று…

‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை

Posted by - June 27, 2025 0
மதுரை: ‘சிபில் ஸ்கோர்’ முறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *