போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

250 0

Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம் எப்படி போகிறது என தெரியாமல் நிறைய பேர் சொந்த காசை இழந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான விருப்ப படிவங்களை பூர்த்தி செய்து இருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் அவர் அக்கவுண்டில் இருந்த 60,000 அபேஸ் ஆகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பேங்கில் இருந்து போன் பண்ணுகிறேன், வேலைவாய்ப்பு கொடுக்கிறோம், ஏடிஎம் லாக் ஆகிவிடும் என எக்கச்சக்க போன் கால்களில் பணத்தை சுருட்ட பல திட்டங்களை போட்டு இருக்கிறது நாச கும்பல்.

பணம் இழந்த பிறகு அதை மீண்டும் மீட்டெடுப்பது என்பது பெரிய விஷயம். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து, அது சைபர் க்ரைம் வழக்காக மாற்றி ஆளை கண்டுபிடிப்பதற்குள் பறிபோன பணத்தை விட அதிகமாகவே செலவாகி விடுகிறது.

தற்போது இந்த பிரச்சனைக்கு தமிழக காவல்துறை ஒரு புதிய வழியை சொல்லி இருக்கிறது. இது போன்ற சைபர் கிரைம் நடந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. 1930 நம்பர் இருக்கு போன் பண்ணி என்ன நடந்தது என்று சொன்னால் போதும்.

போன் தொலைந்து போனால் அந்த போனின் ஐபிஎம் நம்பரை கண்டுபிடித்து உடனே லாக் செய்து விடுகிறார்கள். அதேபோன்று திடீரென வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது என்றால் இந்த நம்பருக்கு புகார் கொடுத்தால் அந்த வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத அளவிற்கு லாக் செய்து விடுகிறார்கள். பணத்தை இழந்து பரிதவிபோருக்கு இது ஒரு பேருதவியாக இருக்கும்.

Related Post

லிவ்-இன் பார்ட்னர் கற்பழிப்பு புகார்: மேக்-அப் கலைஞரை கொலை செய்து மனைவி உதவியுடன் உடலை ஓடையில் வீசிய நபர்

Posted by - September 13, 2023 0
திருமணமான நபருடன் வாழ்ந்து வந்த மேக்அப் கலைஞர், லிவ்-இன் வாழ்க்கை கசந்ததால் கற்பழிப்பு புகார் அளித்து, அதை திரும்பப்பெற மறுத்ததால் கொலை செய்யப்பட்டு, உடல் ஓடையில் வீசப்பட்ட…

இன்று அதல பாதாளத்தில் பங்குச்சந்தை! காரணம் என்ன? எப்படி மீள்வது? என்ன செய்ய வேண்டும்?

Posted by - April 7, 2025 0
இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை அதாவது இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வாரத்தை மிகப்பெரிய சரிவுடன் பங்குச் சந்தை தொடங்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Posted by - July 21, 2023 0
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

வர்த்தகத்தை மூடும் அமேசான்.. இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி..?!

Posted by - November 29, 2022 0
உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையாக இருப்பது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் மாபெரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு…

முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்குகளை வழங்கும் ரயில்வே நிறுவனம்….. ஜூலை 31ம் தேதி இறுதி முடிவெடுக்கும் RITES

Posted by - July 30, 2024 0
முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு மட்டும் இல்லாமல் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவு, இடைக்கால டிவிடெண்ட் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *