முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

88 0
  • முதலமைச்சர் காப்பீடு திட்டம்
  • ரூ.30 லட்சம் பெறுவது எப்படி?
  • அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட்

Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயனாளியாக இருப்பவர்கள் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்ட பயனாளிகளுக்கு மேல் சிகிச்சைக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பாக சிறப்பு மனு எழுதி முதலமைச்சருக்கு மனு அளித்தால் ரூ.30 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். எனவே, முதலமைச்சர் காப்பீடு அட்டை பெறுவது எப்படி, தேவையான ஆவணங்கள் என்ன, எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

முதலமைச்சர் காப்பீடு திட்டம்

1முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள், டயலஸிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் தொடர்பான சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை உட்பட பல சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அவசியம்.

பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய யோஜனா திட்டம்

இதேபோல் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய யோஜனா திட்டம் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயனாளிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். இந்த இரண்டு திட்டத்தையும் இணைத்து ஒரு குடும்பம் ஐந்து வருடத்திற்கு 10 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடத்திற்கும் சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல், சிகிச்சை முறைகள், தொடர் சிகிச்சை வழிமுறைகள், பரிசோதனை முறைகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் போன்றவற்றை திருத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. விவசாயிகள், ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் சிறிய சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளை நாடும்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டையினை வழங்கி கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும்.

காப்பீடு அட்டை பெறுவது எப்படி?

பொதுமக்கள் ரேஷன் கார்டு நகல், ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு எடுத்துச்சென்று இந்த இரண்டு காப்பீடு திட்டங்களுக்கும் விண்ணப்பித்து காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளவும்.இப்போது நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலேயே இந்த காப்பீடு அட்டைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.30 லட்சம் பெறுவது எப்படி?

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு  விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் மட்டுமே இலவசமாக கிடைக்கும் என்றாலும், இதுதொடர்பாக முதலமைச்சருக்கு மனு எழுதிக் கொடுத்தால் ரூ.30 லட்சம் வரையிலான சிகிச்சைகளுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Post

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?

Posted by - May 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அடுத்த மாதம் வரும் அவருடைய பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்…

யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

Posted by - January 6, 2025 0
பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில்…

”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை – திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?

Posted by - December 30, 2024 0
ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் அறிக்கை: தமிழக வெற்றிக்கழகம்…

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - October 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *