ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

155 0

ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

சினிமாத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் குமார், தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், எந்த பின்புலமோ, யாருடைய சிபாரிசோ இல்லாமல் தான் சினிமா துறைக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ள அஜித் குமார்,  எண்ணில் அடங்காத வெற்றிகளையும், தோல்விகளையும் சினிமா துறையில் பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை தனது வெற்றி மீது சந்தேகம் கொள்ளும்போதும் ரசிகர்களின் அன்பும், ஆதரவுமே தன்னை மீண்டு வர செய்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கு என்றும் உண்மையாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என்றும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் தனது ரசிகர்கள் மட்டுமே என தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் அன்பை தனது சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

33 ஆண்டுகால சினிமாத் துறையில் தனக்கு ஊக்கமளித்து, உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள நடிகர் அஜித் குமார்,  தனக்கு பத்ம பூஷன் விருது வழங்கி தனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்திய குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு அதற்காக நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Post

அஜித் அவசரமாக சென்னை வந்தாரா .. என்ன ஆச்சு ஷாலினிக்கு..?

Posted by - July 4, 2024 0
 ஆப்ரேஷன் கவுனில் நடிகர் அஜித்தின் கைகளை பிடித்துக்கொண்டு ஷாலினி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் காதல் மனைவி ஷாலினி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று…

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

ஜிவி பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்

Posted by - August 8, 2023 0
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு,…

‘ரைட் இஸ் பேக்’.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர்

Posted by - June 12, 2023 0
‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின்…

கொலை மிரட்டல் விடுக்கும் என்ஜினீயர்.. பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி

Posted by - September 28, 2023 0
கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *