“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

160 0

புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக, இங்கேயே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் திருத்தத்தில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில், ஆறரை லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்ததாகவும், அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்றும் தகவல் வெளியானது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவின் எந்தப் பகுதியிலும், ஒரு குடிமகனால் வாக்காளராக மாற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த கணக்கெடுப்பும் எடுக்காத நிலையில், பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்வார்கள் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதே சமயம், பிகாரைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வசித்துவந்தால், அவர்கள் இங்கேயே வாக்காளர் அட்டை பெற்று வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சி செய்வதாகவும், இதற்கு எதிராக அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் போராட வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Post

புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்…..

Posted by - December 15, 2025 0
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக…

தேர்தல் வருதுல்ல… திட்டக்குடி பெண்களுக்கு அமைச்சரின் தீபாவளி கிஃப்ட்!

Posted by - October 11, 2025 0
பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு…
Generated Image November 20 2025 10 31AM

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - November 20, 2025 0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து…
Gemini Generated Image 6nw0d46nw0d46nw0

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

Posted by - April 11, 2026 0
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று ஏதேனும் இருக்கிறதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *