விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் விருது விழாக்களின் அழைப்புக் கூட வரவில்லை.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

204 0

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சைமா விருது விழாவில் இரண்டு விருதுகளை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட ஐஸ்வர்யா  ராஜேஷ்.! எந்தெந்த படத்துக்காக விருது கொடுத்தாங்க தெரியுமா ...

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ஃபர்ஹானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வைரலானது. இப்படம் மே 12ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, மனுஷ்ய புத்ரன் சார் சொன்ன மாதிரி, வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது என் கையிலும் இல்லை. கடந்த வருடத்தில் எனது படம் இரண்டு தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு எனது படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. வருடா வருடம் விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் பல விருது விழாக்களின் அழைப்புக் கூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இதில் எனக்கு வருத்தமே. சரி, இப்போ ஃபர்ஹானா படத்திற்கு வருவோம்.விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் விருது விழாக்களின் அழைப்புக் கூட  வரவில்லை.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் | Tamil cinema actress aishwarya rajesh  speaks about award ...

நெல்சன் இந்த கதையை சில வரிகளில் தான் கூறினார். பிடித்திருந்தால் சொல்லுங்கள், நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன் என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சன் சாரிடம் அந்த கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அது போல தான். எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னிடம், பெரிய படங்கள் செய்யுங்கள் என்று சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு பிரபு சார் நல்ல வெல் விஷர். இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

மிக சிரமமான பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா தத்தா உணர்சிவசப்பட்டு பேசினார். ஜித்தன் ரமேஷ் நடிப்பு, இது மாதிரி ஒரு கணவர் நமக்கு வேண்டும் என்று எல்லா பெண்களும் நினைக்கும்படியாக இருக்கும். எங்களின் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் என்றார்.

Related Post

பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

Posted by - June 26, 2023 0
பிக்பாஸ் 7 குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதாவது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த…

மீள முடியாத துயரத்தில் லைக்கா.. இந்தியன் 2 ஓடிடி ரிலீசில் நெட்பிலிக்ஸ் செய்த சம்பவம்…

Posted by - August 10, 2024 0
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்தியன் 2 படம் கடைசியில் மண்ணை கவ்வியது. ஜூலை 12 இந்த படம் ரிலீசானது. கிட்டத்தட்ட 2400 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது.…

குருபெயர்ச்சி 2024…

Posted by - April 30, 2024 0
விழுப்புரம் மாவட்ட அர்ச்சகர் பாஸ்கர் இந்த வருடம் குரு பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்கு சிறப்பு இருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார். இந்த வருடம் 2024 குரு பெயர்ச்சி…

இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி

Posted by - September 30, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே…

இந்த பிரபல நடிகை பாக்கியாவாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கிறாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

Posted by - August 1, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி . பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *