அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்..

145 0

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து புதிய கட்சியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த அரசியல் களத்தில் போட்டியாக குதித்திருப்பதே ஆகும்.

சமூக வலைதளங்கள்:

இணையதள வளர்ச்சியின் எதிரொலி தொழில்துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானம் என பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது போல, அரசியலிலும் இணையதள வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமுறை வாக்காளர்கள், இணையளதத்தை பயன்படுத்துபவர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கு தோதாக அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகிறது.

ஏனென்றால், தேர்தல் பரப்புரைக்கு சமூக வலைதளம் சிறந்த இடமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றனர். ஆனால், இதை அரசியல் கட்சிகள் வேறு கோணத்தில் கையாண்டு வருகின்றனர். அதாவது, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது கட்சியின் கொள்கைககள், செயல்பாடுகள், நிலைப்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று நற்பெயர் பெற்றுக் காெள்வதற்கான முக்கியத்துவம் குறைவாக உள்ளது.

அவதூறும், விமர்சனங்களும்:

அதற்கு பதிலாக, தங்களது போட்டி கட்சி மீதான விமர்சனங்களையே அதிகளவில் கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளனர். சில சமயங்களில் அந்த கட்சிகள் மீது அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் சாதாரண பயனாளர்கள் போல பல ஆயிரக்கணக்கான கணக்குகளை அரசியல் கட்சிகள் சில உருவாக்கி வைத்துள்ளன.

அந்த கணக்குகள் மூலமாக, தங்களது கட்சிக்கு எதிராகவோ, தங்களது கட்சியை விமர்சித்தோ சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டால் அந்த பதிவிட்டவரை மிக கடுமையான விமர்சனம் செய்வதையே இந்த கணக்குகள் மூலம் வேலையாக வைத்துள்ளனர். சில சமயங்களில் இந்த கணக்குகள் மூலமாக தங்களுக்கு எதிராக கருத்துக்களையோ, செய்திகளையோ பதிவிடுபவர்களை தகாத வார்த்தைகளால் ஏளனமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

சைபர் மிரட்டல்:

இதுபோன்ற தொடர் விமர்சனங்களால் தங்கள் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட நெட்டிசன்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், நெட்டிசன்கள் பலரும் அதுபோன்ற எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆரோக்கிய அரசியலை பலரும் வலியுறுத்தி வந்தாலும், அதன் வளர்ச்சியை காட்டிலும் அவதூறு அரசியல் அந்த காலம் முதல் இருந்து கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கிறது. தற்போது அது சமூக வலைதளங்களிலும் உக்கிரமாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் தேர்தல் வரை தீவிரமாக இருப்பார்கள் என்று கூறலாம். அடுத்த 10 மாதங்களில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் எந்தளவு இருக்கிறதோ, அதைவிட பன்மடங்கு அதிகமாக தங்களது எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்களும், அவதூறுகளும், சரமாரி விமர்சனங்களும் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Related Post

திடீர் பரபரப்பு! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, பொன்முடி! புதிய அமைச்சர் யாரு?

Posted by - April 28, 2025 0
மின்சாரத்துறை அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜியும், வனத்துறை அமைச்சர் பதவியை பொன்முடியும் ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டு அரசியல் பரபரப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வேலை வாங்கித்…

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…
ss

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

Posted by - March 23, 2026 0
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, 9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான…

சர்க்கரை நோயால் உங்க உயிருக்கு ஆபத்து வராமல் தடுக்க… ‘இந்த’ 6 விஷயங்கள நீங்க கட்டாயம் செய்யணுமாம்!

Posted by - November 18, 2023 0
உலகளவில் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது சர்க்கரை நோய். இந்தியா சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. அந்தளவிற்கு நாளுக்கு நாள் சர்க்கரை நோயால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *