வாடகை வீட்டுதாரர்கள்.. அப்பார்ட்மென்ட்வாசிகள்.. இந்த 2 மேட்டரையும் மறக்காதீங்க.. சென்னை புயலின் பாடம்

255 0

சென்னை:

சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன.

சென்னையில் பெய்த மழையானது, பெருத்த அதிர்ச்சியையும், இழப்பையும் தந்துவிட்டு போயுள்ளது.. அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும்கூட, பாதிப்புகளிலிருந்து சென்னை மீண்டுவருவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்கிறார்கள்.

எவ்வளவுதான் கட்டுமான பணிகள், வடிகால்வசதிகளை அரசு முன்னெடுத்தாலும்கூட, முழுமையாக அவற்றை சரிசெய்ய முடியாது. இதற்கு பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் தேவையாக இருக்கிறது.வாடகை வீட்டுதாரர்கள்.. அப்பார்ட்மென்ட்வாசிகள்.. இந்த 2 மேட்டரையும்  மறக்காதீங்க.. சென்னை புயலின் பாடம் | Chennai Flood: Rental Person and Do  you know how to increase ...

எச்சரிக்கை:

அந்த வகையில், பிளாஸ்டிக் கழிவு + மழைநீர் சேகரிப்பு என்ற இந்த 2 விஷயத்திலும் தீவிர கவனத்தை மக்கள் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீடுகளை கட்டுகிறார்கள்.. ஆனால், மழைநீர் சேகரிப்பு என்பது பெயரளவுக்கு, கணக்கு காட்டுவதற்காக மட்டுமே உள்ளது.. இதனால், மழைநீரை முழுமையாக சேகரிப்பதில்லை.. மழைநீரை நிலத்துக்குள் அனுப்பும் முயற்சியையும் எடுப்பதில்லை.

அப்பார்ட்மென்ட்:

அடுக்குமாடி குடியிருப்புகளே இப்படி என்றால், தனி வீடு வைத்திருப்பவர்கள் நிலையும் இப்படித்தான்.. எனவே, ஒரு அப்பார்ட்மென்ட்டில் 200 வீடுகள் இருக்கிறதென்றால், அதில் 200 வீட்டுக்குமே தனித்தனியாக ஒரு மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும்.. இதையும் சம்பந்தப்பட்ட வீட்டு ஓனர்களே பராமரிக்க வேண்டும்..

அப்படியிருந்தால்தான், இனிவரும் புயல், மழையை சமாளிக்க முடியும் என்கிறார்கள். நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகரித்து வருகின்றன.. தற்போது தேங்கி நிற்கும் மழைநீரில், கழிவுநீர் அமைப்புகளில் பாதிக்கும் மேல், பிளாஸ்டிக் கழிவுகள் தான் அடைத்து கொண்டிருக்கிறது… இதன் பாதிப்பு வருங்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்..

கழிவுகள்:

கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்றாலும், கழிவுகளை அகற்றும் பணியை வீட்டிலிருந்து நாமே முதலில் துவக்க வேண்டும்.

எனவே, பிளாஸ்டிக் இல்லாத சமூகம் + மழைநீர் சேகரிப்பு இவை இரண்டும் இருந்தாலே, மழை நீரை நிலத்தினுள் செலுத்த முடியும்.. அப்போதுதான், அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்… அப்போதுதான் வருங்கால தலைமுறை தப்பிக்கும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நிலத்தடி நீர் வற்றாமல் இருக்க, குழாயிலிருந்து 3 அடி தூரத்திற்கு கிட்டத்தட்ட, 3 அடி விட்டம் உள்ள 4 அடி ஆழமுள்ள ஒரு குழி தோண்ட வேண்டும். அதில் கூழாங்கற்களையும், ஆற்று மணலையும் அடுக்குகளாக போட்டு, அந்த குழிக்குள் வீட்டு மாடியிலிருந்தோ அல்லது கூரையிலிருந்தோ வரும் மழைநீரைக் குழாய்கள் மூலம் இந்த தொட்டிக்குள் திருப்பிவிட வேண்டும். இதனால் மழைநீர் வீணாகாது.. நிலத்தடி நீரும் வற்றாது.

சேமிக்கலாம்:

இல்லாவிட்டால், அப்பார்ட்மென்ட் போன்ற குடியிருப்புகளில், கொள்கலனில் சேமித்து வைக்கலாம்.. நிலத்திற்கு அடியிலேயே அல்லது நிலமட்டத்துக்கு மேலேயே, பெரிய தொட்டி போல அமைத்து அனைத்து வீடுகளிலும் குழாய்கள் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி வடிகட்டி சேகரிக்கலாம். போர்வெல்லிலும் கூட சேமிக்கலாம்… !

Related Post

ஓலா, ஊபர் போராட்டம் எதிரொலி: 20 கிலோமீட்டருக்கு ரூ.1000 கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி

Posted by - October 18, 2023 0
சென்னை: ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை…

விசிக எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றம் @ கும்பகோணம் மகாமக குளக்கரை – நடந்தது என்ன?

Posted by - December 26, 2023 0
#kumbakonam #tnbjp #vck #annamalai #enmanenmakkal #dmk #pixeltv#pixelmedia கட்சி கொடிகள் அகற்றப்பட்ட மகாமக குளக்கரைப் பகுதி கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள்…

கோவில்:நாச்சியார்கோவில் அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்….

Posted by - June 5, 2024 0
திருவிழா: வைகாசி அமாவாசையைத் தொடர்ந்து நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்குப் பதிமூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன்  அருளாசி வழங்குகிறாள். தல சிறப்பு:…

2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!!

Posted by - March 5, 2024 0
தமிழக அரசு சார்பில், 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உள்ளிட்டோர் தெருவே செய்யப்பட்டு அவர்களுக்கு…

“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Posted by - November 13, 2024 0
அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார். அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *