இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

208 0

அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டம் என்ற பெயரில் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு முதல் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்திருந்தாலும், அந்த மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை  வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்  அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தில் இனி மாதம்தோறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்க இருப்பது மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை  மாநில,மத்திய அரசாங்கங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியாகும் நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அதற்கு முன்பாக அறிவிப்பை வெளியிடும் வகையில் ராமாமிர்தம் அம்மையார் உதவித் தொகை புதுமைப் பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பெண்களின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் இதுவரை 2லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வந்தனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பாணை அமலுக்கு வந்தால் மேலும் அதிக கல்லூரி மாணவிகள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - May 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்… கனிமொழிக்கு அண்ணாமலை பதில்…!

Posted by - April 28, 2023 0
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துககொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை…

இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

Posted by - January 31, 2025 0
கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி…

உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

Posted by - January 6, 2025 0
ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ”தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்” என்று…

Dengue Fever | அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Posted by - October 8, 2025 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. டெங்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *