Dengue Fever | அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

170 0

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது தமிழக அரசு. கடந்த 2,3 வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12,264 பேரில், 3,665 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 9,367 பேரில், 1171 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 7,998 பேரில், 1,278 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொசு உற்பத்தியாகும் இடங்களில் நகராட்சி நிர்வாகத்துடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் நீர் நிலையங்கள், குட்டைகள், ஓடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் வீட்டின் அருகே நீர் தேங்காதவாறு பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். டெங்கு பரவாமல் இருக்க மாவட்டந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Post

சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 20, 2022 0
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

Posted by - February 17, 2023 0
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.…

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

Posted by - July 10, 2023 0
நாமக்கல்: இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர்…

கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்

Posted by - July 13, 2023 0
நாகர்கோவில்: குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *