Dengue Fever | அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு… தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

154 0

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது தமிழக அரசு. கடந்த 2,3 வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏடிஸ் வகை கொசுக்களால், டெங்கு பாதிப்பு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12,264 பேரில், 3,665 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 9,367 பேரில், 1171 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 7,998 பேரில், 1,278 பேருக்கும் டெங்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொசு உற்பத்தியாகும் இடங்களில் நகராட்சி நிர்வாகத்துடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் நீர் நிலையங்கள், குட்டைகள், ஓடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் வீட்டின் அருகே நீர் தேங்காதவாறு பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். டெங்கு பரவாமல் இருக்க மாவட்டந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Post

பல ஆண்களுடன் தொடர்பு.. மருமகன் உதவியுடன் மகளை கொன்ற தாய் – 3 மாதத்துக்கு பின் சிக்கியது எப்படி?

Posted by - December 1, 2022 0
சென்னை காசிமேடு பெண் கொலையை தற்கொலை என நாடகமாடிய குடும்பத்தினர் போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை நாகூரான்…

மின் கட்டணம் குறைய போகுது.. வீட்டுக்கே கணக்கெடுக்க வரும் அதிகாரிகள்.. சந்தோஷமான செய்தி

Posted by - November 9, 2023 0
சென்னை: அடுக்குமாடி பொது சேவை மின் கட்டணத்தை குறைப்பு விவகாரத்தில் வீட்டுக்கே வந்து அதிகாரிகள் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். எந்த வீடுகள் எல்லாம் பத்து வீடுகள்…

பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - July 2, 2025 0
      #businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp…

கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க

Posted by - December 8, 2023 0
சென்னை: கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால்…

சென்னையில் 10 ஆயிரம் பேர்களை ஏமாற்றி ரூ.800 கோடி மெகா மோசடி- 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது

Posted by - February 16, 2023 0
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *