உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

321 0

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி.

எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 மாதங்களில் இம்மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த 60 கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி.பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் இம்மருத்துவமனைக்கு வந்த 33 கர்ப்பிணி பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டில் ஜூலை வரை மேலும் 13 கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுOver 60 pregnant women found HIV positive in 16 months in UP hospital, probe  ordered - Sanj Samachar

இது தவிர, முன்னதாக இதே மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்தவர்களில் 35 கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்கனவே எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்ட பெண்களுக்கு அரசு தேவையான மருந்துகளை கொடுத்து வருகிறது. இது குறித்து மீரட் மருத்துவமனை அதிகாரி அகிலேஷ் மோகன் கூறுகையில், “மீரட் லாலா ரஜபத் ராய் மருத்துவமனையில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் பிரசவம் நடந்திருக்கிறது. தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். எவ்வாறு அவர்களுக்கு எய்ட்ஸ் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஒரே மருத்துவமனையில் இந்த அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் அதிகமாக இருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. பொதுவாக பாலியல் உறவு, ரத்தம் பரிமாற்றம், ஊசி மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது. தாயிடமிருந்து பிரசவத்தின் போதும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவுகிறது.

Related Post

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Posted by - July 21, 2023 0
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

ரூ.10-க்கு ரீசார்ஜ் திட்டம்: டிராய் உத்தரவு!

Posted by - January 17, 2025 0
365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய பத்து ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இன்றளவும் 15 கோடி பேர்…

வீட்டில் கஞ்சா வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம்.. வேறு வழக்கிற்காக வந்த போலீசிடம் வசமாக மாட்டினார்

Posted by - February 24, 2024 0
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் எந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர்…

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *