பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

229 0

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள் நட்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் தன் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருந்த போதும் வழக்கறிஞர் செந்தில்குமார் அந்தப் பெண்ணுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் இளங்கோவன், வழக்கறிஞரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, திருப்பூர் பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண்ணின் மூலம் வழக்கறிஞர் செந்தில் குமாரை தொடர்பு கொண்டு என் வழக்கு ஒன்று நீங்கள் வாதாட வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனை நம்பிய வழக்கறிஞர் செந்தில் குமார் சேலம் வரும்படி கூறியுள்ளார். பின்னர் சேலம் வந்த அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு குரும்பபட்டி வன உயிரில் பூங்கா சென்றனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் கோரிமேடு பகுதியில் உள்ள பச்சியம்மன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளனர்.வழக்கறிஞர் செந்தில்குமார்

அப்போது அந்தப் பெண், தன் வழக்கு சம்பந்தமான டாகுமெண்டுகளை ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும்படி கூறி கோரிமேடு அருகே உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்கனவே அவரை பின் தொடர்ந்து வந்த மதுரையை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அவரது கூட்டாளிகள் வழக்கறிஞரை குண்டு கட்டாக காரில் தூக்கி சரமாரியாக தாக்கியப்படியே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அப்போது அங்கிருந்த காவல்துறை வாகனம், அந்த கடத்தல் வாகனத்தை பின் தொடர்ந்து காரில் சிக்கிக் கொண்டிருந்த வழக்கறிஞர் செந்தில்குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்களில் காரில் இருந்த இளங்கோவன் மட்டுமே போலீஸ் பிடியில் சிக்கினார். மேலும் உடன் வந்த நபர்களும் அந்த பெண்ணும் அங்கிருந்து மாயமாகியுள்ளார். இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல் நிலையம் மற்றும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Post

தயிரை சூடு பண்ணி சாப்பிடலாமா? ஆயுர்வேதத்தின் படி அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Posted by - December 7, 2023 0
தயிர் இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத இடத்தைக் கொண்டுள்ளது, எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது தயிர் இல்லாமல் முழுமையடையாது. இந்திய உணவுகளில் பலவேறு வழிகளில் தயிர்…
Generated Image January 01 2026 12 01PM

பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

Posted by - January 1, 2026 0
2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள். குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம…

ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது.. எங்கே தெரியுமா?

Posted by - November 29, 2023 0
சென்னை: இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி…

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Posted by - May 8, 2023 0
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த…

ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - December 9, 2025 0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சரண் விடுப்பு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எப்போது சரண் விடுப்பு பணம் பலன் பெறலாம், யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பது தொடர்பாக அரசாணை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *