கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

196 0

கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும், 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, நான் தான் குண்டு வைத்தேன் என்று கூறி சம்பவத்திற்கு பொறுப்பேற்று கேரளாவை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மார்ட்டினை ரகசிய காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மார்ட்டின் போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ” ஜெஹோவா’ஸ் விட்செனசஸ் சபையின் போதனைகள் மீது தனக்கு உடன்பாடு இல்லை. அச்சபையின் கருத்துகள் தேசத்திற்கே ஆபத்தானது.

தனது புகார்களை அச்சபை கண்டுகொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெஹோவா விட்னெசஸ் என்பது கிறிஸ்தவ மதத்தில் மிகச்சிறிய பிரிவு ஆகும். இந்த பிரிவை உலகம் முழுவதும் சுமார் 85 லட்சம் பேர் பின்பற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களில் 30 பேர் மாயம்: வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் திரும்பி வராத சோகம்

Posted by - August 2, 2023 0
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர்…

கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!

Posted by - November 22, 2025 0
கிரெடிட் கார்டு EMI-ஐ தேர்ந்தெடுப்பதற்கு முன், அது என்ன? அதன் நன்மை என்ன? ஆபத்துகள் என்னென்ன? என்பதை புரிந்துகொள்வது அவசியம்.இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில்…

சிங்கத்திடம் சிக்கிய பசு – செங்கலை எறிந்து காப்பாற்றிய விவசாயி- வைரலாகும் வீடியோ

Posted by - July 1, 2023 0
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும். இந்நிலையில், கிர் வனப்பகுதியில்…

பள்ளி, கல்லூரிகளில் மாஸ்க் கட்டாயம்.. முக்கிய கட்டுப்பாடுகள் – அதிரடி

Posted by - December 26, 2022 0
Restrictions | கொரோனா மீண்டும் தலைதூக்கும் நிலையில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை தொடங்கியுள்ளன கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு கட்டுப்பாடு…

சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா?

Posted by - December 21, 2022 0
Coronavirus | இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அனைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *