எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

76 0

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

விஜய் பேசும்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் நாளாக அமையும் என தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது. அக்கட்சி அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு தவெகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், “விஜய் பேசாமல் இருக்கும்போதே பேச வேண்டும் என கேட்கும் மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பேசினால் என்ன ஆகும் என்பதை எதிர்க்கட்சி நண்பர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் பேசினால் உங்கள் கதை முடிந்து விடும். காரணம் எதை, எப்போது, எந்த நேரத்தில் பேச வேண்டும் என்பதையறிந்து அவர் பேசுவார். அப்படி விஜய் பேசும்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் நாளாக அமையும்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் அவரின் ஆற்றலும், சிந்தனையும் நான் பார்க்கின்றபோது திரைப்படத்தில் மட்டுமல்ல உலகளவில் சிறந்த தலைவராக விஜய் வரப் போகிறார். தமிழ்நாட்டை ஆளப் போகிறார். ஒருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டால், அவர் இருக்கும் வரை விஜய் தான் முதலமைச்சராக இருப்பார். ஒரு இளைஞர் இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார். சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க சினிமாவில் ரூ.500 கோடி வருவாய் தேவையில்லை என சொல்லி வந்திருக்கிறார். ஜனநாயகன் படம் நிறுத்தப்படாலும் கவலையில்லை. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக விஜய் வந்துள்ளார்.

எல்லா தலைவரையும் நான் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து 3ம் தலைமுறையாக புரட்சி தளபதி விஜயோடு நான் இணைந்து பயணிக்கின்றேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு சகோதரனாக இருந்து என்னென்ன உதவிகளை செய்ய வேண்டுமோ செய்துக் கொடுப்பேன்.

234 தொகுதிகளையும் நான் கணக்கில் கொண்டு கரூர் சம்பவத்திற்கு முன், கரூர் சம்பவத்திற்கு பின், ஜனநாயகன் படம் முடக்கப்பட்டதற்கு முன், பின், அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்  பார்த்தால் நாம் 42 சதவிகிதம் இருக்கிறோம். எல்லா கட்சியும் சேர்ந்து 40 சதவிகிதத்தையும் எட்டிப் பிடிக்கவில்லை. இதனால் தான் டெல்லி நம்மை பார்த்து பயப்படுகிறது. தனிச்சையாக நம்மிடம் இவ்வளவு வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுவதைக் கண்டு அதிர்கிறார்கள். விஜய் அறிக்கை விட்டால் ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள்.

விருப்பமனு வாங்க 25 ஆயிரம் பேர் வந்தார்கள். போலீசாரே திணறி விட்டார்கள். பனையூர் அலுவலகம் வீதியில் இருப்பவர்கள் போராட்டம் நடத்தி விடும் அளவுக்கு சென்று விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 மணி நேரத்தில் 25 ஆயிரம் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ் மண்ணில் இருந்து யாரும் நீக்க முடியாது” என கூறியுள்ளார்.

Related Post

விஜய்க்கு வலைவீசும் பாஜக

Posted by - March 9, 2026 0
தீய சக்திகளின் தவறான ஆலோசனைகளை ஏற்று, திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, பாஜக – அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அவர் தடைக்கல்லாக இருக்கக்கூடாது. தமிழக அரசியலில் விஜய்…

ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

Posted by - February 20, 2026 0
சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய்…

தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது

Posted by - September 25, 2025 0
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்கத் தான் போட்டி நடப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

திருச்சியில் விஜய் வேட்பு மனு தாக்கல்! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடல் 🔥 தமிழக அரசியல் சூடுபிடிக்குது!”

Posted by - April 2, 2026 0
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்,திருச்சி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள்,ஆதரவாளர்கள் திருச்சியில்…

பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ – பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?

Posted by - November 22, 2025 0
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *