CHT

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

85 0

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

விஜய் பேசும்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் நாளாக அமையும் என தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது. அக்கட்சி அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு தவெகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், “விஜய் பேசாமல் இருக்கும்போதே பேச வேண்டும் என கேட்கும் மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பேசினால் என்ன ஆகும் என்பதை எதிர்க்கட்சி நண்பர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விஜய் பேசினால் உங்கள் கதை முடிந்து விடும். காரணம் எதை, எப்போது, எந்த நேரத்தில் பேச வேண்டும் என்பதையறிந்து அவர் பேசுவார். அப்படி விஜய் பேசும்போது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே திரும்பி பார்க்கும் நாளாக அமையும்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் அவரின் ஆற்றலும், சிந்தனையும் நான் பார்க்கின்றபோது திரைப்படத்தில் மட்டுமல்ல உலகளவில் சிறந்த தலைவராக விஜய் வரப் போகிறார். தமிழ்நாட்டை ஆளப் போகிறார். ஒருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டால், அவர் இருக்கும் வரை விஜய் தான் முதலமைச்சராக இருப்பார். ஒரு இளைஞர் இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார். சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க சினிமாவில் ரூ.500 கோடி வருவாய் தேவையில்லை என சொல்லி வந்திருக்கிறார். ஜனநாயகன் படம் நிறுத்தப்படாலும் கவலையில்லை. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக விஜய் வந்துள்ளார்.

எல்லா தலைவரையும் நான் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து 3ம் தலைமுறையாக புரட்சி தளபதி விஜயோடு நான் இணைந்து பயணிக்கின்றேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு சகோதரனாக இருந்து என்னென்ன உதவிகளை செய்ய வேண்டுமோ செய்துக் கொடுப்பேன்.

234 தொகுதிகளையும் நான் கணக்கில் கொண்டு கரூர் சம்பவத்திற்கு முன், கரூர் சம்பவத்திற்கு பின், ஜனநாயகன் படம் முடக்கப்பட்டதற்கு முன், பின், அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்  பார்த்தால் நாம் 42 சதவிகிதம் இருக்கிறோம். எல்லா கட்சியும் சேர்ந்து 40 சதவிகிதத்தையும் எட்டிப் பிடிக்கவில்லை. இதனால் தான் டெல்லி நம்மை பார்த்து பயப்படுகிறது. தனிச்சையாக நம்மிடம் இவ்வளவு வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுவதைக் கண்டு அதிர்கிறார்கள். விஜய் அறிக்கை விட்டால் ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள்.

விருப்பமனு வாங்க 25 ஆயிரம் பேர் வந்தார்கள். போலீசாரே திணறி விட்டார்கள். பனையூர் அலுவலகம் வீதியில் இருப்பவர்கள் போராட்டம் நடத்தி விடும் அளவுக்கு சென்று விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 மணி நேரத்தில் 25 ஆயிரம் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ் மண்ணில் இருந்து யாரும் நீக்க முடியாது” என கூறியுள்ளார்.

Related Post

tvk vijay e1777957622993

TN Election Result 2026: சென்னையின் 16 எம்.எல்.ஏக்கள் யார்? வாக்கு வித்தியாசம்? மிகப்பெரிய, சிறிய வெற்றியாளர்கள்

Posted by - May 5, 2026 0
TN Election Result 2026 Chennai MLAs: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் விவரங்கள் கீழே…

துரோகத்தால் நாறும் சென்னை: தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளையாவது முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி

Posted by - August 7, 2025 0
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஏழாவது நாளாக…

அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! – கதறும் பாஜக

Posted by - December 13, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை…

“விஜய் வேடிக்கை மட்டும் பார்த்தால் எப்படி?”

Posted by - December 17, 2025 0
புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய்…
Gemini Generated Image mdnoecmdnoecmdno

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் – பழனிசாமி உறுதி

Posted by - April 9, 2026 0
குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *