ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

57 0

சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால், மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பும் மகளிருக்கு ஒரு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தார். அப்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, மகளிர் உரிமைத் தொகை தடுக்கப்பட்டதாக என்றும், நடைமுறையில் இருக்கும் திட்டத்தை யார் தடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், நாங்களும் 2000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எப்படி அதை தடுப்போம் என்றும் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதோடு, தேர்தல் உஷ்ணத்தின் காரணமாகத் தான் கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் கொடுத்துள்ளீர்கள், கடந்த 4 ஆண்டுகளாக அதை கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கீதா ஜீவன் பதில்

எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கேள்வியை கேட்பதால், அதன் அடிப்படையில் பதில் கூறுவதாக தெரிவித்து, இனி ஒவ்வொரு வருடமும் இந்த 2000 ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அமைச்சர் ஒருவர் கூறினால், அது அரசின் அறிவிப்பு போன்றது தான்.

அதனால், இதன் அடிப்படையில், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், இனி ஆண்டுதோறும் கோடை காலத்தில், மகளிருக்கு 2000 ரூபாய் சிறப்புத் தொகை வழங்கப்படும் என்பது உறுதியாகிறது.

இதேபோல், இது குறித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் வருவதால், வெயில் காரணமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதனால் தான், மகளிருக்கு கூடுதலாக கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த கோடைகால சிறப்புத் தொகை கொடுத்தது, எங்கள் ஆட்சியின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

Related Post

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

திருச்சியில் விஜய் வேட்பு மனு தாக்கல்! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடல் 🔥 தமிழக அரசியல் சூடுபிடிக்குது!”

Posted by - April 2, 2026 0
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்,திருச்சி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள்,ஆதரவாளர்கள் திருச்சியில்…

’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

Posted by - September 22, 2025 0
‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’ தமிழக…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - April 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *